மேலும் அறிய

பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?

குன்றத்தூரில் எலி தொல்லைக்கு வீட்டில் எலி மருந்து வைத்ததில் மகன், மகள் பலி.பெற்றோர் கவலைக்கிடம் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரிதரன்(34), குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா(30), இவர்களுக்கு திருமணம் ஆகி விஷாலினி(6), என்ற மகளும், சாய் சுதர்சன் என ஒரு வயதில் மகனும் உள்ளனர்.

பாதிப்படைந்த குடும்பம்

இந்நிலையில் நேற்று காலை இவர்கள் நான்கு பேரும் வாந்தி மற்றும் வயிற்று வலியால் துடித்து அலறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் அவர்கள் நான்கு பேரையும் மீட்டு கோவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். 

விசாரணையில் வெளிவந்த உண்மை

பின்னர் கணவன், மனைவி இருவரும் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் குன்றத்தூர் போலீசார் இறந்து போன பிள்ளைகள் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதில் இவரது வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் முதலில் கடையில் எலி மருந்து வாங்கி வைத்துள்ளார். அந்த மருந்தில் எலி அப்படியே ஒட்டி கொள்ளும் என்பதால் குழந்தைகள் கையை வைத்தால் பாதிப்பு ஏற்படும் . எனவே குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க , தான் பணிபுரியும் வங்கிக்கு மருந்து அடித்த நிறுவனத்தை ஆன்லைன் மூலம் எலி மருந்து அடிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

என்ன நடந்தது ?

இவரது வீட்டில் ஊழியர்கள் இரண்டு பேர் நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு வந்து வீடு முழுவதும் ஆங்காங்கே வெளி மருந்து வைத்து விட்டு சென்று விட்டனர். அதன் பிறகு அவர்கள் இரவு தூங்கிய நிலையில் இரவு முழுவதும் வீட்டிற்குள்ளேயே எலிமருந்து நெடி சுழன்று அடித்ததில் இவர்களுக்கு உடலுக்கு உபாதை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அளவுக்கு அதிகமான எலிமருந்தை ஊழியர்கள் வீட்டிற்குள் வைத்து விட்டு சென்றதாலேயே குழந்தைகள் இருவரும் இறந்து போனதும் கணவன் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

போலீசார் வழக்கு பதிவு

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து வீட்டிற்கு வந்து எலிமருந்து வைத்துவிட்டு சென்ற ஊழியர்கள் இருவரை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடையில் வாங்கி வைக்கும் எலி பேஸ்ட்டை வைத்தால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வீட்டிற்கு எலி மருந்து வைத்த நிலையில், பிள்ளைகள் இருவரும் இறந்து போன நிலையில் கணவன் மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக குன்றத்தூர் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Embed widget