மேலும் அறிய

தஞ்சையில் திருமணமான 5 மாதங்களில் புதுமண தம்பதி தற்கொலை

பிரபாகரன் அடித்ததில் அஜிதா தவறி விழுந்து இறந்துள்ளாரா, இதனை அறிந்த பிரபாகரன், உறவினர்களுக்கும், போலீசாருக்கும் பயந்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸ் விசாரணை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி திப்பியக்குடி ஊராட்சி, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த, நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் பிரபாகரன் (32). இவருக்கும், தெக்கூர் பகுதியை சேர்ந்த மும்மூர்த்தி மகள் அஜிதா (27) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து பிரபாகரன், அஜிதா மற்றும் பிரபாகரனின் தாயார் மகேஸ்வரி ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். பிரபாகரனின் தந்தை ராமலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகேஸ்வரி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.


தஞ்சையில் திருமணமான 5 மாதங்களில் புதுமண தம்பதி தற்கொலை

மகேஸ்வரி ஒரத்தநாடு ஆஸ்பத்திரியில் மருத்துவ உதவியாளராக வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து மாலை  பிரபாகரன் உறவினர் ஒருவர் பிரபாகரனை தேடி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் ஒரு அறையில் பிரபாகரன் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் அருகிலேயே அஜிதாவும் பிணமாக கிடந்தார். அவரது வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளியவாறு இருந்தது. இதனால் அஜிதா விஷம் குடித்து இருக்கலாம் என  கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பாநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  பிரபாகரன், அஜிதா ஆகியோரின் உடல்களை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  திருமணமானமாகி 5 மாதங்களானதால், போலீசார் ஆர்டிஒ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


தஞ்சையில் திருமணமான 5 மாதங்களில் புதுமண தம்பதி தற்கொலை

இது குறித்து போலீசாரின் விசாரணையில், பிரபாகரன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவர் திருமணத்திற்காக கடந்த 5 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து  அஜிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனின் சகோதரர் லண்டனில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரபாகரனுக்கும், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், பிரபாகரன் அடித்ததில் அஜிதா தவறி விழுந்து இறந்துள்ளாரா, இதனையறிந்த பிரபாகரன், உறவினர்களுக்கும், போலீசாருக்கும் பயந்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

ஓனரிடம் போட்டுக் கொடுத்ததால் ஆத்திரம்..! ஆம்புலன்ஸ் டிரைவரின் தலையில் கல்லை போட்டு கொலை..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஏஐடியூசி அதிரடி முடிவு: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு வியூகமா?
தஞ்சையில் ஏஐடியூசி அதிரடி முடிவு: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு வியூகமா?
தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: 8 தொகுதிகளிலும் வெற்றி உறுதி... தஞ்சை மாவட்டம் திமுக கோட்டைதான்
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: 8 தொகுதிகளிலும் வெற்றி உறுதி... தஞ்சை மாவட்டம் திமுக கோட்டைதான்
110 ஆண்டுகள் பெருமையுடன் நடந்த பாஸ்கா நாடகம்... அனைத்து மதத்தினரும் பங்கேற்று நடித்தனர்
110 ஆண்டுகள் பெருமையுடன் நடந்த பாஸ்கா நாடகம்... அனைத்து மதத்தினரும் பங்கேற்று நடித்தனர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
Ranipet Dmk Candidate : சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
Trump Iran War Ceasefire: அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
Embed widget