மேலும் அறிய

இயற்கையை, விவசாயத்தை பாதுகாக்க தஞ்சையில் நம்மாழ்வார் திருவிழா - எப்போது தெரியுமா?

மனித ஆரோக்கியத்தைக் காக்க கேடு விளைவிக்கும் நிறுவனங்களை எதிர்த்து போராடும் இயக்கமாக நம்மாழ்வார் மக்கள் இயக்கம் செயல்படும்.

தஞ்சாவூர்: இயற்கையை, விவசாயத்தை பாதுகாக்க வரும் 27,28 ல் தஞ்சாவூரில் நம்மாழ்வார் திருவிழா நடக்கிறது என்று நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.

இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960-ம் ஆண்டு ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர்

களப்பணியில் ஈடுபடாமல் செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து மூன்றாண்டுகளில் வெளியேறிய இவர், பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். அவற்றுக்கான ஆக்கப்பூர்வமான மாற்றுக்களையும் அவர் முன்வைத்தார். தமிழகத்தில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வந்த இவர், குடும்பம் அமைப்பு உட்பட 250க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராகவும் இருந்தார்.


இயற்கையை, விவசாயத்தை பாதுகாக்க தஞ்சையில் நம்மாழ்வார் திருவிழா - எப்போது தெரியுமா?

தஞ்சாவூரில் நம்மாழ்வார் திருவிழா

‘தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் அனைத்துக்கும் சென்று கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தார். இத்தகைய பெருமை பெற்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவிழா வரும் 27, 28ம்  தேதிகளில்    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

மனித உறவுகளை சீரழிக்கும் சமூக வலைதளங்கள்

இதுகுறித்து நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சி. மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 21ம் நூற்றாண்டின் மையப்பகுதி மக்கள் வாழ்வதற்கு கேள்விக்குறியாகி உள்ளது. இன்று வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மனித உறவுகளை சீரழிக்கிறது. மனிதகுலம் வாழும் பூமி பெரிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. இதை மாற்றியமைக்க உலகில் உள்ள வல்லுனர்கள் தத்தமது கருத்துகளை கூறிவரும் நிலையில் மண்ணை காக்க தொலைநோக்கு பார்வையில் சிந்தித்தவர் நம்மாழ்வார்.

நமது நிலத்தில் ரசாயன உரம் பயன்படுத்தியது தான் பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளது என்று கூறியது இன்றும் உண்மையாகவே இருந்து வருகிறது. பசுமைப் புரட்சி எங்கெல்லாம் உருவாக்கப்பட்டதோ அங்கெல்லாம் புற்றுநோய் உள்ளது. பல்வேறு நோய்களிலிருந்து மக்களைக் காக்க நம்மாழ்வாரின் கருத்தை சமூக சக்தியாக மாற்ற வேண்டும்.

கருத்தரங்கம், கண்காட்சி, ஆய்வரங்கம்

மனித ஆரோக்கியத்தைக் காக்க கேடு விளைவிக்கும் நிறுவனங்களை எதிர்த்து போராடும் இயக்கமாக நம்மாழ்வார் மக்கள் இயக்கம் செயல்படும். மண்,மக்களை கொள்ளையடிக்கும் நிறுவனங்களை தடுத்து, இயற்கையை பாதுகாப்பதை, இயற்கை விவசாயத்தை வளர்ப்பதை வலியுறுத்தி மாநாடு நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் நம்மாழ்வார் திருவிழாவில் கருத்தரங்கம், கண்காட்சி, ஆய்வரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இயற்கை விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், பசுமை பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அறிஞர் பெருமக்கள் பங்கேற்கின்றார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் யாழினிதவச்செல்வன், நாராயணன், பொறியாளர் ஜோதிபாசு,வழக்கறிஞர் கவிமணி. கீரீன்நீடா அமைப்பின் ராஜவேலு, தமிழ்நாடு தன்னார்வ அமைப்பின் ராம் பிரபு, உமாசங்கர்,முகம்மது ரபீக்,  விசிறிசாமியார் முருகன், தவச்செல்வன், ரத்தினகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Breaking News LIVE: சேலம் வாரச்சந்தையில் ரூபாய் 9 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Breaking News LIVE: சேலம் வாரச்சந்தையில் ரூபாய் 9 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Breaking News LIVE: சேலம் வாரச்சந்தையில் ரூபாய் 9 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Breaking News LIVE: சேலம் வாரச்சந்தையில் ரூபாய் 9 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Vijay Sethupathi :  நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Cinema Headlines: மகாராஜா முதல் நாள் வசூல்.. வைரமுத்து, ஹிப் ஹாப் ஆதி தந்த அட்வைஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: மகாராஜா முதல் நாள் வசூல்.. வைரமுத்து, ஹிப் ஹாப் ஆதி தந்த அட்வைஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
Embed widget