மேலும் அறிய

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

முதல்வர், ஆசிரியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைறவேற்றற வேண்டும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 2வது நாளாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றறது. தொடர்ந்து மார்ச் 1ம் தேதி முதல் 5 தேதி வரை ஆசிரியர்கள் கோரிக்கை அடங்கிய கருப்பு அட்டையை அணிந்த பணிக்கு செல்ல எடுத்த முடிவின்படி  கருப்பு அட்டை அணியும் போராட்டம் இன்று 2வது நாளாக நடைபெறுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, "பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடிய ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். அரசு பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். மேற்பரப்பு படித்த அனைவருக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மறுக்கிறது.  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
 
அதன்படி, 5 நாள்களுக்கு கருப்பு அட்டை அணிந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர்கள் பணிக்கு செல்வது. தொடர்ந்து மார்ச் 18ல் மாவட்ட தலைநகரில் உண்ணாவிரத போராட்டமும், ஏப்ரல் 8 இல் மாநில தலைநகரில் உண்ணாவிரதமும், மே 2 இல் மாநில தலைநகரில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது. முதல்வர், ஆசிரியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைறவேற்றற வேண்டும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

 
காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
 
காரைக்கால் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இங்கே ஏழு நீதிமன்றங்கள் உள்ள நிலையில் அதற்கான நீதிபதிகள் மூன்று பேர் மட்டுமே இருப்பதாகவும் மூன்று நீதிபதிகளே 7 நீதிமன்றங்களையும் நிர்வகித்து வருவதால் வழக்குகள் தேங்கி காலதாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வருவதாகவும், இதே போல  நீதிமன்ற பணியாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் குற்றம் சாட்டி உடனடியாக காலியாக உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களின் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்  நான்கு நாட்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளில் நீதிமன்ற வாயில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்   தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget