மேலும் அறிய

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் : மக்களின் கோரிக்கை என்ன?

முண்டாசு இல்லாமலும், மீசையை எடுத்துவிட்டு மாறுபட்ட தோற்றத்தில் மேல நாகை கிராமத்தில் வலம் வந்துள்ளார் பாரதியார். 

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் 
 
இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற கிராமத்து குடிமகன் முதல் தேசிய தலைவர்கள் வரை பலரும் பல விதமான தியாகங்களை செய்துள்ளனர். மக்களிடையே சுதந்திர உணர்வை தூண்ட அகிம்சை வழியிலும் போராட்ட வழியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் இந்திய தலைவர்கள் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் ஆங்கிலேயரின் சிறைகளில் சிக்காமல் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி, பல்வேறு இடங்களுக்கு  சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தி மக்களிடையே கவிதைகள் மூலமும் பாடல்கள் மூலமும் தமிழ் மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டிய தேசிய தலைவர்களில் ஒருவர் நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் : மக்களின் கோரிக்கை என்ன?
இந்தியா இதழில் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியான கட்டுரைகளை காரணம் காட்டி அவ்விதழின் உரிமையாளரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அதில் பணிபுரிந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரையும் கைது செய்ய ஆங்கிலேயர் முனைந்துள்ளனர் என்று கேள்விப்பட்டு பாரதியார் புதுச்சேரிக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் புதுச்சேரியில் "இந்தியா" இதழைத் தொடர்ந்து நடத்தியதோடு சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் பாரதியாருடன் நட்பு கொண்டிருந்தார். பாரதியாரை எப்படியாவது கைது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் போலீசாரை அனுப்பி பாரதியாரை தேடி வந்தது. இத்தகைய இக்கட்டான சூழலில் பாரதியாருக்கு ரகசியமாக அடைக்கலம் தந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி.

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் : மக்களின் கோரிக்கை என்ன?
1918-ஆம் ஆண்டு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேல நாகை கிராமத்தில் கோடியாளம் கே.வி.ரெங்கசாமி ஐயங்கார் வீட்டில் 10 நாட்கள் தங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் பாரதியார். அப்போது ஆங்கிலேயர்கள் தன்னை அடையாளம் காணாதபடி பாரதியார் தனது தனித்துவமான அடையாளமாக இருந்து வந்த கட்டும் முண்டாசு இல்லாமலும், மீசையை எடுத்துவிட்டு மாறுபட்ட தோற்றத்தில் மேல நாகை கிராமத்தில் வலம் வந்துள்ளார் பாரதியார். 1829-ஆம் ஆண்டு வேதாரண்யம் பகுதியில் பிறந்த வாசுதேவர் என்ற யோகி சிறு வயதிலேயே மன்னார்குடிக்கு வந்து அருகிலுள்ள மேல நாகை கிராமத்தில் தங்கி மந்தாகினி குலத்தில் நீராடி, தியானம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னாளில் இவர் தவம் செய்வதற்காக பிரணவ சக்கர வடிவில் "குஸ்மா கரகம்" ஒன்றை கட்டி அதில் வாசுதேவர் தனது சீடர்களுடன் அமர்ந்து தியானம் செய்து வந்துள்ளார்.
 
பாரதியார் மேல நாகையில் கோடியாளம்  வீட்டில் தலைமறைவாக இருந்தபோது அருகில் இருந்த இந்த குஸ்மாகரகத்திற்கு வந்து அமர்ந்து தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குஸ்மாகரகத்தில் தான் தற்போது பாரதியாரின் நினைவாக அவரது உருவ சிலை நிறுவப்பட்டு அவரது நினைவு நாள்,சுதந்திர தினம், பிறந்த நாட்களில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கிராமங்களும் நகரங்களாக மாறிவரும் நிலையில் இன்றும் இந்த மேல நாகை கிராமம் தென்னை, வாழை,கடலை என பசுமை காடாகவே காட்சியளிக்கிறது.
 
பாரதியாருக்கு நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில் அவர் இங்கு வந்து தங்கி இருந்த அக்காலத்தில் இந்த மேலநாகை கிராமம் இன்னும் அதிக வளங்களுடன், செழிப்பாக இருந்திருக்கும். தஞ்சை தரணியின் இந்த எழில் சூழ்ந்த கிராமத்தின் அழகை ரசித்த பாரதியார் "பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு" எனும் பாடலை இங்கு இயற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கு மந்தாகினி குளக்கரையில் அமைந்துள்ள மந்தாகினி அம்மனை பாரதியார் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதியாரால் பெருமை பெற்றுள்ள இந்த மேல நாகை கிராமத்தில் பாரதியார் வந்து சென்ற இவ்விடத்தை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என  இப்பகுதி மக்களும், இங்குள்ள மகாகவி பாரதியார் அறக்கட்டளையும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மேகேதாட்டு அணை முயற்சிக்கு எதிர்ப்பு: தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்
மேகேதாட்டு அணை முயற்சிக்கு எதிர்ப்பு: தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்
வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்... தஞ்சாவூரில் பரபரப்பு
வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்... தஞ்சாவூரில் பரபரப்பு
போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர் ராஜராஜ சோழன்
போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர் ராஜராஜ சோழன்
சிசிடிவி காட்சிகளால் அம்பலமான கொள்ளை: அரியலூரில் 27 ஆடுகள், 2 கார்கள் பறிமுதல்
சிசிடிவி காட்சிகளால் அம்பலமான கொள்ளை: அரியலூரில் 27 ஆடுகள், 2 கார்கள் பறிமுதல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
Embed widget