மேலும் அறிய

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் : மக்களின் கோரிக்கை என்ன?

முண்டாசு இல்லாமலும், மீசையை எடுத்துவிட்டு மாறுபட்ட தோற்றத்தில் மேல நாகை கிராமத்தில் வலம் வந்துள்ளார் பாரதியார். 

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் 
 
இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற கிராமத்து குடிமகன் முதல் தேசிய தலைவர்கள் வரை பலரும் பல விதமான தியாகங்களை செய்துள்ளனர். மக்களிடையே சுதந்திர உணர்வை தூண்ட அகிம்சை வழியிலும் போராட்ட வழியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் இந்திய தலைவர்கள் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் ஆங்கிலேயரின் சிறைகளில் சிக்காமல் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி, பல்வேறு இடங்களுக்கு  சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தி மக்களிடையே கவிதைகள் மூலமும் பாடல்கள் மூலமும் தமிழ் மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டிய தேசிய தலைவர்களில் ஒருவர் நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் : மக்களின் கோரிக்கை என்ன?
இந்தியா இதழில் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியான கட்டுரைகளை காரணம் காட்டி அவ்விதழின் உரிமையாளரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அதில் பணிபுரிந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரையும் கைது செய்ய ஆங்கிலேயர் முனைந்துள்ளனர் என்று கேள்விப்பட்டு பாரதியார் புதுச்சேரிக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் புதுச்சேரியில் "இந்தியா" இதழைத் தொடர்ந்து நடத்தியதோடு சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் பாரதியாருடன் நட்பு கொண்டிருந்தார். பாரதியாரை எப்படியாவது கைது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் போலீசாரை அனுப்பி பாரதியாரை தேடி வந்தது. இத்தகைய இக்கட்டான சூழலில் பாரதியாருக்கு ரகசியமாக அடைக்கலம் தந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி.

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் : மக்களின் கோரிக்கை என்ன?
1918-ஆம் ஆண்டு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேல நாகை கிராமத்தில் கோடியாளம் கே.வி.ரெங்கசாமி ஐயங்கார் வீட்டில் 10 நாட்கள் தங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் பாரதியார். அப்போது ஆங்கிலேயர்கள் தன்னை அடையாளம் காணாதபடி பாரதியார் தனது தனித்துவமான அடையாளமாக இருந்து வந்த கட்டும் முண்டாசு இல்லாமலும், மீசையை எடுத்துவிட்டு மாறுபட்ட தோற்றத்தில் மேல நாகை கிராமத்தில் வலம் வந்துள்ளார் பாரதியார். 1829-ஆம் ஆண்டு வேதாரண்யம் பகுதியில் பிறந்த வாசுதேவர் என்ற யோகி சிறு வயதிலேயே மன்னார்குடிக்கு வந்து அருகிலுள்ள மேல நாகை கிராமத்தில் தங்கி மந்தாகினி குலத்தில் நீராடி, தியானம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னாளில் இவர் தவம் செய்வதற்காக பிரணவ சக்கர வடிவில் "குஸ்மா கரகம்" ஒன்றை கட்டி அதில் வாசுதேவர் தனது சீடர்களுடன் அமர்ந்து தியானம் செய்து வந்துள்ளார்.
 
பாரதியார் மேல நாகையில் கோடியாளம்  வீட்டில் தலைமறைவாக இருந்தபோது அருகில் இருந்த இந்த குஸ்மாகரகத்திற்கு வந்து அமர்ந்து தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குஸ்மாகரகத்தில் தான் தற்போது பாரதியாரின் நினைவாக அவரது உருவ சிலை நிறுவப்பட்டு அவரது நினைவு நாள்,சுதந்திர தினம், பிறந்த நாட்களில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கிராமங்களும் நகரங்களாக மாறிவரும் நிலையில் இன்றும் இந்த மேல நாகை கிராமம் தென்னை, வாழை,கடலை என பசுமை காடாகவே காட்சியளிக்கிறது.
 
பாரதியாருக்கு நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில் அவர் இங்கு வந்து தங்கி இருந்த அக்காலத்தில் இந்த மேலநாகை கிராமம் இன்னும் அதிக வளங்களுடன், செழிப்பாக இருந்திருக்கும். தஞ்சை தரணியின் இந்த எழில் சூழ்ந்த கிராமத்தின் அழகை ரசித்த பாரதியார் "பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு" எனும் பாடலை இங்கு இயற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கு மந்தாகினி குளக்கரையில் அமைந்துள்ள மந்தாகினி அம்மனை பாரதியார் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதியாரால் பெருமை பெற்றுள்ள இந்த மேல நாகை கிராமத்தில் பாரதியார் வந்து சென்ற இவ்விடத்தை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என  இப்பகுதி மக்களும், இங்குள்ள மகாகவி பாரதியார் அறக்கட்டளையும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருப்பழனம் கோயில் சிலைகள்: வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐம்பொன் சிலைகளை மீட்க முன்னாள் காவல் துறை தலைவர் வலியுறுத்தல்
திருப்பழனம் கோயில் சிலைகள்: வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐம்பொன் சிலைகளை மீட்க முன்னாள் காவல் துறை தலைவர் வலியுறுத்தல்
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
தஞ்சாவூர் அருகே பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால அருளிக்கம் திருப்பயணம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
தஞ்சாவூர் அருகே பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால அருளிக்கம் திருப்பயணம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
Embed widget