மேலும் அறிய

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் : மக்களின் கோரிக்கை என்ன?

முண்டாசு இல்லாமலும், மீசையை எடுத்துவிட்டு மாறுபட்ட தோற்றத்தில் மேல நாகை கிராமத்தில் வலம் வந்துள்ளார் பாரதியார். 

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் 
 
இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற கிராமத்து குடிமகன் முதல் தேசிய தலைவர்கள் வரை பலரும் பல விதமான தியாகங்களை செய்துள்ளனர். மக்களிடையே சுதந்திர உணர்வை தூண்ட அகிம்சை வழியிலும் போராட்ட வழியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் இந்திய தலைவர்கள் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் ஆங்கிலேயரின் சிறைகளில் சிக்காமல் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி, பல்வேறு இடங்களுக்கு  சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தி மக்களிடையே கவிதைகள் மூலமும் பாடல்கள் மூலமும் தமிழ் மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டிய தேசிய தலைவர்களில் ஒருவர் நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் : மக்களின் கோரிக்கை என்ன?
இந்தியா இதழில் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியான கட்டுரைகளை காரணம் காட்டி அவ்விதழின் உரிமையாளரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அதில் பணிபுரிந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரையும் கைது செய்ய ஆங்கிலேயர் முனைந்துள்ளனர் என்று கேள்விப்பட்டு பாரதியார் புதுச்சேரிக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் புதுச்சேரியில் "இந்தியா" இதழைத் தொடர்ந்து நடத்தியதோடு சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் பாரதியாருடன் நட்பு கொண்டிருந்தார். பாரதியாரை எப்படியாவது கைது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் போலீசாரை அனுப்பி பாரதியாரை தேடி வந்தது. இத்தகைய இக்கட்டான சூழலில் பாரதியாருக்கு ரகசியமாக அடைக்கலம் தந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி.

பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் : மக்களின் கோரிக்கை என்ன?
1918-ஆம் ஆண்டு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேல நாகை கிராமத்தில் கோடியாளம் கே.வி.ரெங்கசாமி ஐயங்கார் வீட்டில் 10 நாட்கள் தங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் பாரதியார். அப்போது ஆங்கிலேயர்கள் தன்னை அடையாளம் காணாதபடி பாரதியார் தனது தனித்துவமான அடையாளமாக இருந்து வந்த கட்டும் முண்டாசு இல்லாமலும், மீசையை எடுத்துவிட்டு மாறுபட்ட தோற்றத்தில் மேல நாகை கிராமத்தில் வலம் வந்துள்ளார் பாரதியார். 1829-ஆம் ஆண்டு வேதாரண்யம் பகுதியில் பிறந்த வாசுதேவர் என்ற யோகி சிறு வயதிலேயே மன்னார்குடிக்கு வந்து அருகிலுள்ள மேல நாகை கிராமத்தில் தங்கி மந்தாகினி குலத்தில் நீராடி, தியானம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னாளில் இவர் தவம் செய்வதற்காக பிரணவ சக்கர வடிவில் "குஸ்மா கரகம்" ஒன்றை கட்டி அதில் வாசுதேவர் தனது சீடர்களுடன் அமர்ந்து தியானம் செய்து வந்துள்ளார்.
 
பாரதியார் மேல நாகையில் கோடியாளம்  வீட்டில் தலைமறைவாக இருந்தபோது அருகில் இருந்த இந்த குஸ்மாகரகத்திற்கு வந்து அமர்ந்து தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குஸ்மாகரகத்தில் தான் தற்போது பாரதியாரின் நினைவாக அவரது உருவ சிலை நிறுவப்பட்டு அவரது நினைவு நாள்,சுதந்திர தினம், பிறந்த நாட்களில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கிராமங்களும் நகரங்களாக மாறிவரும் நிலையில் இன்றும் இந்த மேல நாகை கிராமம் தென்னை, வாழை,கடலை என பசுமை காடாகவே காட்சியளிக்கிறது.
 
பாரதியாருக்கு நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில் அவர் இங்கு வந்து தங்கி இருந்த அக்காலத்தில் இந்த மேலநாகை கிராமம் இன்னும் அதிக வளங்களுடன், செழிப்பாக இருந்திருக்கும். தஞ்சை தரணியின் இந்த எழில் சூழ்ந்த கிராமத்தின் அழகை ரசித்த பாரதியார் "பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு" எனும் பாடலை இங்கு இயற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கு மந்தாகினி குளக்கரையில் அமைந்துள்ள மந்தாகினி அம்மனை பாரதியார் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதியாரால் பெருமை பெற்றுள்ள இந்த மேல நாகை கிராமத்தில் பாரதியார் வந்து சென்ற இவ்விடத்தை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என  இப்பகுதி மக்களும், இங்குள்ள மகாகவி பாரதியார் அறக்கட்டளையும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
Embed widget