ரயில்வே துறையில் மெகா வேலை வாய்ப்பு... மிஸ் பண்ணிடாதீங்க
ரயில் இந்தியா நிறுவனத்தில் (RITES) 600 மூத்த தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical Assistant) காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தஞ்சாவூர்: ரயில்வே துறையில் 600 மெகா வேலைகள் காத்திருக்கிறது. டிப்ளமோ, டிகிரி படித்திருந்தால் போதுமாம். அப்புறம் என்ன தாமதம் உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
ரயில் இந்தியா நிறுவனத்தில் (RITES) 600 மூத்த தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical Assistant) காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு சம்பளம் ரூ.29,735. கல்வித் தகுதி: டிப்ளமோ/B.Sc. கெமிஸ்ட்ரி. நவம்பர் 12, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனால காலதாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
ரயில்வே துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம் தற்போது 600 மூத்த தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு என்பதால், இந்தியா முழுவதும் உள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான விண்ணப்பம் ஆரம்ப தேதி கடந்த 14.10.2025 அன்று தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2025 ஆகும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Diploma அல்லது B.Sc. in Chemistry ஆகிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.29,735/- சம்பளமாக வழங்கப்படும். இது தவிர, அரசு விதிகளின்படி மற்ற சலுகைகளும் கிடைக்கும். எனவே, தகுதியுள்ளவர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த வயது வரம்பு தளர்வுகளைப் பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, SC/ ST/ Ex-s/ PWD பிரிவினர் ரூ.100/-ம், மற்ற பிரிவினர் ரூ.300/-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தேதி மற்றும் மையங்கள் குறித்த தகவல் பின்னர் வெளியிடப்படும்.
தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், RITES நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rites.com/ மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக் கொண்டு, நவம்பர் 12, 2025-க்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். இது மத்திய அரசு வேலை. எனவே காலதாமதம் செய்யாமல், தவறாமல் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.






















