மேலும் அறிய

Mayiladuthurai: ஓட்டுனர் இல்லாமல் திடீரென ஓடிய பேருந்து; ஓட்டம் பிடித்த மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் திடீரென ஓடிய பேருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் அரசு பேருந்து இன்று காலை மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், பேருந்து ஓட்டுநர் பேருந்தின் இன்ஜினை நிறுத்தாமல், நியூட்ரல் கியரில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார்.


Mayiladuthurai: ஓட்டுனர் இல்லாமல் திடீரென ஓடிய பேருந்து; ஓட்டம் பிடித்த மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

அப்போது, திடீரென்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து தானாக இயங்கத் துவங்கியது. இதனை பார்த்த பேருந்து நிலையத்தில் இருந்த  பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும், பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து, சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து எதிரே இருந்த சுவரில் மோதி பேருந்து தானாக நின்றுள்ளது. இதில் சுவர் மற்றும் அதிலிருந்த இரும்பு கிரில்கள் சேதமடைந்தன. பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தது.


Mayiladuthurai: ஓட்டுனர் இல்லாமல் திடீரென ஓடிய பேருந்து; ஓட்டம் பிடித்த மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

பேருந்து தானாக இயங்கத் துவங்கியதும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தப்பியோடியதால் உயிர் சேதம் ஏதும் இன்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், பேருந்தின் உள்ளே யாரும் இல்லாத காரணத்தால் நல்வாய்ப்பாக யாருக்கும் ஏதும் பாதிப்பு ஏற்ப்படாமல் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தை தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை மீட்டு அரசு பணிமனைக்கு எடுத்துச் சென்றனர். ஓட்டுனர் இல்லாமல் தானாக ஓடிய  சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 200 -க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பாஷித் தலைமையில் நடைபெற்ற முகாமை தமுமுக மாவட்ட தலைவர் ஷேக்அலாவுதீன், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். முகாமில், வயிற்றுப்புண், ஜீரண கோளாறு, குடல் இறக்கம், குடல் புற்றுநோய், மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு இலவச பரிசோதனை நடைபெற்றது. 


Mayiladuthurai: ஓட்டுனர் இல்லாமல் திடீரென ஓடிய பேருந்து; ஓட்டம் பிடித்த மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

இம்முகாமில், 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். முகாமை தமுமுக மருத்துவரணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
Breaking News LIVE:அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
Breaking News LIVE:அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
Breaking News LIVE:அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
Breaking News LIVE:அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Sabarimala Aravana Payasam : பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
Embed widget