![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மயிலாடுதுறை அருகே அனைவரது பாராட்டையும் பெற்ற ஊராட்சி தலைவர் - காரணம் என்ன..?
சோழம்பேட்டை ஊராட்சியில் பொதுமக்கள் யாரும் கேள்வி கேட்காத வகையில் வரவு செலவு கணக்குகள் குறித்து பேனர் வைத்து அசத்திய ஊராட்சி மன்ற தலைவரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.
![மயிலாடுதுறை அருகே அனைவரது பாராட்டையும் பெற்ற ஊராட்சி தலைவர் - காரணம் என்ன..? Mayiladuthurai news panchayat council president put up a banner of the panchayat budget so that everyone can know TNN மயிலாடுதுறை அருகே அனைவரது பாராட்டையும் பெற்ற ஊராட்சி தலைவர் - காரணம் என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/16/db8c46b1cba99584d94d3368852c57c91692173993848733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய திருநாட்டில் 77 வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுகந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டமும் நேற்றைய தினம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பதனியிருப்பு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இதேபோன்று மயிலாடுதுறை ஒன்றியம் சோழம்பேட்டை, கங்கன புத்தூர், பொன்னூர், பாண்டூர், திருமங்கலம், திருவேள்விக்குடி, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் தேக்க தொட்டி அமைத்தல், தார் சாலை அமைத்தல், குடிநீர் வசதி, மின் இணைப்பு அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு வரவு செலவு கணக்குகள் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இதில் குறிப்பிடத்தக்க வகையில் சோழம்பேட்டை ஊராட்சியில் வரவு செலவு கணக்குகள் பற்றி பட்டியலிட்டு கிராம மக்கள் கேள்வி கேட்காத வண்ணம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி ராமமூர்த்தி வரவு செலவு கணக்குகள் விபரம் அச்சிடப்பட்ட பேனர் வைத்ததுள்ளார். ஊராட்சி கணக்கு ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக பேனர் வைத்த ஊராட்சி மன்ற தலைவரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
மேலும், அனைத்து ஊராட்சிகளும் இது போன்று பேனர் வைத்து வரவு செலவு கணக்குகள் அதில் எழுதப்பட்டால் அனைத்து மக்களுக்கும் எந்தெந்த திட்டங்களில் எவ்வளவு வரவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம் எனவும், இதனை அரசே ஒரு ஆணையாக பிறப்பிக்கலாம் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஊராட்சி மன்ற வரவு செலவு கணக்குகளை மறைத்து எவ்வாறு பொதுமக்களை ஏமாற்றலாம் என எண்ணும் ஒரு சில ஊராட்சி மன்ற தலைவர்களில் இவரை போன்றவர்கள் விதிவிலக்காக திகழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)