மேலும் அறிய

குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும்; புதிய எஸ்.பி., பேட்டி

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்தும், விதமாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை செயல்பாடு என புதிதாக காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சுகுணாசிங் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக தலைமையிலான அரசு ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து பல நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் 38 வது மாவட்டமாக கடைசியாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீ நாதா நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தமிழக அரசு 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஸ்ரீ நாதா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தென்காசி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியில் இருந்த சுகுணா சிங் பொறுப்பேற்றுள்ளார். 


குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும்; புதிய எஸ்.பி., பேட்டி

சுகுணா சிங் கடந்த 2013 ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று ஐதராபாத் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். இவர் தென்காசி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக 2017 ஆம் ஆண்டு இருந்துள்ளார். பின்னர் நெல்லை மாநகர இணை ஆணையாளராக பொறுப்பேற்றார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, கடைசியாக புதிய மாவட்டமாக உருவான தென்காசி மாவட்டத்தின் முதல் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார், தற்போது மீண்டும் புதிய மாவட்டமான மயிலாடுதுறைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும்; புதிய எஸ்.பி., பேட்டி


தமிழகத்தில் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 2-வது காவல் கண்காணிப்பாளராக சுகுணாசிங் இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை முழுமையான காவல் மாவட்டமாக உருவாக்க துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்களுக்காகத்தான் காவல்துறை உள்ளது என்பது உறுதிப்படுத்தும் விதமாக மாவட்ட காவல்துறை செயல்பாடும் எனவும், பொதுமக்களின் நண்பன் காவல்துறை என்ற வகையில் காவல்நிலையங்களின் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து உரிய முறையில் அணுகி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் தொடர்ந்து பேசியவர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பாலியல் குற்றங்கள், மணல் திருட்டு, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்கள் தடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைவரும் அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து காவல் துறையினரிடம் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். புதிய எஸ்.பி.,யின் பேட்டி, அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் குறையும் என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PBKS vs MI LIVE Score: நிதானத்தில் இருந்து அதிரடிக்கு கியரை மாற்றும் மும்பை இந்தியன்ஸ்; தடுக்க முயலும் பஞ்சாப்!
PBKS vs MI LIVE Score: நிதானத்தில் இருந்து அதிரடிக்கு கியரை மாற்றும் மும்பை இந்தியன்ஸ்; தடுக்க முயலும் பஞ்சாப்!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்புMansoor Alikhan Hospitalized:  மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PBKS vs MI LIVE Score: நிதானத்தில் இருந்து அதிரடிக்கு கியரை மாற்றும் மும்பை இந்தியன்ஸ்; தடுக்க முயலும் பஞ்சாப்!
PBKS vs MI LIVE Score: நிதானத்தில் இருந்து அதிரடிக்கு கியரை மாற்றும் மும்பை இந்தியன்ஸ்; தடுக்க முயலும் பஞ்சாப்!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Sajeevan Sajana: கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
Embed widget