மேலும் அறிய

சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த கால்நடைகளை அடைத்து வைத்த நகராட்சி நிர்வாகம்

போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த மாடுகள் நகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மாட்டின் உரிமையாளர்கள் நகராட்சி வளாகத்தின் பூட்டை உடைத்து மாடுகளை மீட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்து இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகிறது‌.  இவ்வாறு போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பல்வேறு பொதுமக்கள் வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்து வண்ணம் இருந்தது. இதனை அடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பாக அவ்வப்போது கால்நடைகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.


சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த கால்நடைகளை அடைத்து வைத்த நகராட்சி நிர்வாகம்

பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!

இந்நிலையில் இன்று பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த ஏழு மாடுகள் மற்றும் கன்றுகளை  நகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்து நகராட்சி வளாகத்தில் அடைத்து வைத்தனர். இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் பெட்ரோல் கேனுடன் வந்து நகராட்சி அலுவலக ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். மேலும், நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மாடுகள் அடைக்கப்பட்டிருந்த வளாகத்தின் பூட்டை கல்லால் உடைத்து தங்களது மாடுகளை மீட்டு சென்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் மாடுகளை அழைத்து வந்து, தண்ணீர், வைக்கோல் போன்று எந்த ஒரு  உணவும் அளிக்காமல் அவற்றை நகராட்சி நிர்வாகம் சித்திரவதை செய்வதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.


சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த கால்நடைகளை அடைத்து வைத்த நகராட்சி நிர்வாகம்

Cinema Round-up : வாரிசு இசை வெளியீட்டு விழா முதல் சூர்யாவின் ரசிகர்கள் சந்திப்பு வரை.. இன்றைய சினிமா ரவுண்ட்-அப் இதுதான்!

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக மாட்டின் உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகத்தில் புகுந்து அடைந்து வந்திருந்த கால்நடைகளை பூட்டை உடைத்து அழைத்து சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீர்காழி ஈசானிய தெருவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கட்சியினர் ஏராளமானோர்  எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின்  35 -ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது, இதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள  எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு சீர்காழி நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் ஏற்பாட்டில்,  ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே சந்திரசேகரன் , ரவிச்சந்திரன் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர் பி.வி .பாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி,  மற்றும் அதிமுக கழக நகர,ஒன்றிய  பொறுப்பாளர்கள் திரளானோர் கலந்துகொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 


சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த கால்நடைகளை அடைத்து வைத்த நகராட்சி நிர்வாகம்

பின்னர் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் படத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ்  மலர் தூவி மரியாதை செய்தார், தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
தஞ்சாவூரை பசுமையால் அலங்கரித்த ஆர்ஆர் இன்ஃப்ரா! 8,500 மரக்கன்றுகள் நட்டு சாதனை
தஞ்சாவூரை பசுமையால் அலங்கரித்த ஆர்ஆர் இன்ஃப்ரா! 8,500 மரக்கன்றுகள் நட்டு சாதனை
ரூ.1 கோடி வேண்டுமா? என்ன செய்யணும்?: தஞ்சாவூர் கலெக்டர் அறிவித்தது என்ன?
ரூ.1 கோடி வேண்டுமா? என்ன செய்யணும்?: தஞ்சாவூர் கலெக்டர் அறிவித்தது என்ன?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Embed widget