மேலும் அறிய

மயிலாடுதுறை : 100 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும்பணிகள் தீவிரம்..!

மயிலாடுதுறையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதற்கட்ட பணி தொடங்கியுள்ளது. இதனையடுத்து அங்கு வசித்த மக்கள் இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். 

தமிழ்நாடின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியராக இரா.லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா அவருக்கு பின்னர் சுகுணா சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும் மற்ற அனைத்து துறைகளும் நாகப்பட்டினம் மாவட்ட கட்டுப்பாட்டில்தான் இது நாள் வரை இயங்கி வருகிறது. 


மயிலாடுதுறை : 100 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும்பணிகள் தீவிரம்..!

இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேளாண்மைத்துறை புதிய கட்டடத்தின் மாடி பகுதியிலும் தற்போது தற்காலிகமாக இயங்கி வருகிறது. மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்டத்திற்கான இடங்களை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பால்பண்ணை என்ற பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 23 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 


மயிலாடுதுறை : 100 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும்பணிகள் தீவிரம்..!

அதற்காக இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் எல்லை வரையறை செய்யும் பணிகள் நடைபெற்றுகிறது. இந்த சூழலில் இடம் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான என்றாலும், 200 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே ஆட்சியர் அலுவலகம் அமையும் இடத்தை பயன்படுத்திய தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என கேட்டு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் வட்டாட்சியர் ராவணன் மற்றும் மயிலாடுதுறை காவல்துறையினர் முன்னிலையில் தீவிரமாக பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


மயிலாடுதுறை : 100 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும்பணிகள் தீவிரம்..!

இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்களை பால்பண்ணை பகுதிகளில் நேரில் சந்தித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜகுமார், பூம்புகார் சட்டப்பேரவை நிவேதா எம்.முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணியால், அங்கு உள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அளவீடு செய்யப்பட்ட பகுதியில் மட்டுமே பணிகள் நடைபெறும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்தார். இழப்பீடு குறித்து முதல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இழப்பீடு வழங்கவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Embed widget