மேலும் அறிய

மயிலாடுதுறை : 100 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும்பணிகள் தீவிரம்..!

மயிலாடுதுறையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதற்கட்ட பணி தொடங்கியுள்ளது. இதனையடுத்து அங்கு வசித்த மக்கள் இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். 

தமிழ்நாடின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியராக இரா.லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா அவருக்கு பின்னர் சுகுணா சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும் மற்ற அனைத்து துறைகளும் நாகப்பட்டினம் மாவட்ட கட்டுப்பாட்டில்தான் இது நாள் வரை இயங்கி வருகிறது. 


மயிலாடுதுறை : 100 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும்பணிகள் தீவிரம்..!

இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேளாண்மைத்துறை புதிய கட்டடத்தின் மாடி பகுதியிலும் தற்போது தற்காலிகமாக இயங்கி வருகிறது. மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்டத்திற்கான இடங்களை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பால்பண்ணை என்ற பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 23 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 


மயிலாடுதுறை : 100 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும்பணிகள் தீவிரம்..!

அதற்காக இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் எல்லை வரையறை செய்யும் பணிகள் நடைபெற்றுகிறது. இந்த சூழலில் இடம் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான என்றாலும், 200 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே ஆட்சியர் அலுவலகம் அமையும் இடத்தை பயன்படுத்திய தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என கேட்டு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் வட்டாட்சியர் ராவணன் மற்றும் மயிலாடுதுறை காவல்துறையினர் முன்னிலையில் தீவிரமாக பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


மயிலாடுதுறை : 100 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும்பணிகள் தீவிரம்..!

இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்களை பால்பண்ணை பகுதிகளில் நேரில் சந்தித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜகுமார், பூம்புகார் சட்டப்பேரவை நிவேதா எம்.முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணியால், அங்கு உள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அளவீடு செய்யப்பட்ட பகுதியில் மட்டுமே பணிகள் நடைபெறும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்தார். இழப்பீடு குறித்து முதல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இழப்பீடு வழங்கவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
92-வது ஆண்டு '27 கருட சேவை' வைபவம்… ஒரே இடத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்: எங்கு தெரியுங்களா?
92-வது ஆண்டு '27 கருட சேவை' வைபவம்… ஒரே இடத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்: எங்கு தெரியுங்களா?
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
400 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரம்! ஆசியாவின் மிகப்பெரிய திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் 
400 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரம்! ஆசியாவின் மிகப்பெரிய திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் 

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget