![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அரசுப்பேருந்து மூலம் கட்டணமின்றி அலுவலகம் சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா
சுற்றுசூழல் பாதிப்பை குறைக்க வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள்
![அரசுப்பேருந்து மூலம் கட்டணமின்றி அலுவலகம் சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா Mayiladuthurai Collector who came to office in a government bus! அரசுப்பேருந்து மூலம் கட்டணமின்றி அலுவலகம் சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/20/ee3cf71421fc0d06e473ca08bee4864b_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கள்கிழமை ஒருநாள் அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகம் வருதல், சைக்கிளில் அலுவலகம் வருதல் என பல வழிகளில் பயணங்கள் மேற்கொண்டு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
நரகத்தில் கூட இடம் கிடைக்காது’ - குஷ்பு ஷேர் செய்த உணவை தவறவிட்ட பாட்டியின் வைரல் விடியோ!
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தனது வீட்டில் இருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று அங்கு இருந்து அரசுப்பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரிந்தார். சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து, 3 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார். மேலும் அவர் மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார்.
Jos Alukkas Robbery: வேலூர் நகை கொள்ளையில் திடீர் திருப்பம் : 15 கிலோ நகை சுடுகாட்டில் மீட்பு!
பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்தார். மாவட்ட ஆட்சியரோடு ஆண் அதிகாரிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர். வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அப்போது மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக முக கவசம் சமூக இடைவெளியை பின் படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் இந்த வேளையில், அரசு பேருந்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வழியின்றி கூட்டம் வழிந்து நிரம்ப மக்கள் கூட்டத்தில் இடித்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அரசு பேருந்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
நெல்லை பள்ளிக்கட்டட விபத்து - பொய்யான தகவல்களுக்கு அதிகாரிகள் உறுதி சான்று வழங்கியது அம்பலம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)