மேலும் அறிய

படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

காவல்துறையினர் ஓட்டுநரை சமாதானம் செய்து பேருந்தினை இயக்கும்படி கூறியதன் பேரில் ஓட்டுனர் பேருந்தினை இயக்கி சென்றார்.

மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலம் வந்து செல்கின்றனர். இதில், சில உள்கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.


படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

இந்நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக பாப்பாகுடி சென்ற அரசுப் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் பலர் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணித்துள்ளனர். அவர்களை உள்ளே நிற்கச்சொல்லி ஓட்டுநர் பலமுறை சத்தமிட்டும், இருந்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தாத மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடியே வந்துள்ளார். 


படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

இதனால் பேருந்தை இயக்கமுடியாமல் சிரமமடைந்த பேருந்தின் ஓட்டுநர், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து அரசுப்பேருந்தினை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரை மணி நேரமாக சாலையிலேயே நின்றுகொண்டிருந்த பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ்ம் செல்லமுடியாமல் சிக்கிக்கொண்டது. பின்னர் வெகுநேரம் கழித்து அங்கு வந்த ஓட்டுனர் பேருந்திணை எடுத்து சாலையின் ஓரமாக நிறுத்தினார். 


படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் ஓட்டுநரை சமாதானம் செய்து பேருந்தினை இயக்கும்படி கூறியதன் பேரில் ஓட்டுனர் பேருந்தினை இயக்கி சென்றார். அதிக அளவு பயணிகளை ஏற்றியதால் கோபமடைந்து ஓட்டுனர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மணல்மேடு உள்ளிட்ட மார்க்கத்தில் பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

இது ஒரு புறம் இருக்க கொரோனோ வைரஸ் தொற்று வழிகாட்டுதலின் படி பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் சமூக விலகலை பின் படுத்தும் விதமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அதனை பேருந்துகளிலும் கடைப்பிடிக்காமல் இவ்வாறு மூச்சு விட கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் மிகுந்த பேருந்துகளில் மாணவர்கள் பயணித்தால் கொரோனோ வைரஸ் தொற்று பரவாதா? என கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள் இதனை கருத்தில் கொண்டு அரசு மாணவர்கள் சமூக விலகலை பின் படுத்தும் விதமாக காலை மற்றும் மாலை வேளைகளில் அவர்களுக்கென தனி பேருந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
AP Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்த பிரபலங்கள்!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்தபிரபலங்கள்!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Lok Sabha Election 2024 LIVE: பெரும் பதற்றம்! ஆந்திராவில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு
Lok Sabha Election 2024 LIVE: பெரும் பதற்றம்! ஆந்திராவில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு
Embed widget