மேலும் அறிய

மன்னார்குடி கோயில் யானை செங்கமலம் தினமும் 15 கி.மீ நடக்க வேண்டும்- மருத்துவர்கள் அறிவுரை

யானையின் ஆரோக்கியம் என்ன வகையான உணவுகள் வழங்கப்படுகிறது, யானையின் எடை மற்றும் உடல் கூறுகள் எவ்வாறு உள்ளது அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் உள்ள செங்கமல யானையை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் ஆய்வு.
 
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் தனியாரிடம் உள்ள யானைகளின் உடல் நிலை, மற்றும் யானைகள் பராமரிக்கப்படும் நிலை குறித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்பேரில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள யானைகள் மற்றும் தனியாரிடம் உள்ள யானைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்திற்கு வனவிலங்கு குழு உறுப்பினரும், யானைகள் ஆராய்ச்சியாளருமான சிவகணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் யானைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

மன்னார்குடி கோயில் யானை செங்கமலம் தினமும் 15 கி.மீ நடக்க வேண்டும்- மருத்துவர்கள் அறிவுரை
 
அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலிலுள்ள செங்கமலம் என்ற பெண் யானையை மாநில வன விலங்கு குழு உறுப்பினரும், மாநில யானைகள் ஆராய்ச்சியாளருமான டாக்டர் சிவகணேசன் யானையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். யானை 5 நிமிடத்திற்கு ஒருமுறை உட்கொள்ளும் அளவு, பாகன் சொல்வதை புரிந்து கொள்ளும் திறன், யானையின் கண், காது, கால், போன்றவற்றின் நிலை, ஆரோக்கியம், யானை தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பரப்பளவு போன்றவை குறித்து ஆய்வு செய்து யானையின் விபரங்கள் குறித்து யானை பாகன் ராஜகோபாலனிடம் விசாரித்தார். ஆய்வின்போது கோயில் செயல் அலுவலர் சங்கீதா, கோயில் மேலாளர் நாகம்மாள் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 
மேலும் மாநில வனவிலங்கு குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன் கூறுகையில், யானையின் ஆரோக்கியம் என்ன வகையான உணவுகள் வழங்கப்படுகிறது, யானையின் எடை மற்றும் உடல் கூறுகள் எவ்வாறு உள்ளது, யானைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கோயில்கள் மற்றும் அதன் வளாக பகுதிகளில் யானையை வைத்துக் கொள்ளக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் நந்தவனம் ஒன்றை உருவாக்கி அங்கே யானைக்கு தேவையான தங்குமிடம், புதிய நீர் தொட்டி, யானைகள் உண்ணக்கூடிய புல்வகைகளை அங்கு உற்பத்தி செய்ய வேண்டும்.

மன்னார்குடி கோயில் யானை செங்கமலம் தினமும் 15 கி.மீ நடக்க வேண்டும்- மருத்துவர்கள் அறிவுரை
நாளொன்றுக்கு யானைகள் குறைந்தபட்சம் 15 கிலோமீட்டர் நடக்க வேண்டும், எனவே அதற்குரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். யானை பாகன் மற்றும் உதவி பாகன் ஆகியோர் யானைகள் இருக்கும் இடத்தில் தங்க வசதி செய்து தரவேண்டும். யானைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிற வகையில்  அந்த இடம் அமைய வேண்டும், இவை அனைத்தும் அரசு வழிகாட்டு நெறிகள் கூறியுள்ளது. மேற்கண்ட வசதிகள் ஒவ்வொரு கோயில்களிலும் உள்ளதா என்பது குறித்து அந்தந்த கோவில்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அது குறித்து ஆய்வறிக்கையை, இந்து சமய அறநிலையத் துறைக்கு சமர்ப்பிக்கப்படும் என மாநில வனவிலங்கு குழு உறுப்பினரும் யானைகள் ஆராய்ச்சியாளருமான சிவகணேசன் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8  பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8  பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
US Suspends Visa: ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
Embed widget