மேலும் அறிய

தஞ்சையில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் தாமதம் - பயணிகள் அவதி

தஞ்சை அருகே, ரயில்வே கேட் பகுதியில் லாரி மோதி உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதையடுத்து ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் வெகுவாக அவதியடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை - தரங்கம்பாடி சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த தடத்தின் வழியாக கும்பகோணத்தில் இருந்து மங்கைநல்லூருக்கு டீசல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக இந்த லாரி ரயில்வே கேட்டில் மோதியது.

இதனால் ரெயில்வே லைன் மேலே உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் தீப்பொறி ஏற்பட்டு அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அப்பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக உயா் மின்னழுத்த கம்பிக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.

இதனால் சிக்னல் கிடைக்காமல் கும்பகோணம்- மயிலாடுதுறை இடையே வந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக கும்பகோணம், மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை- திருச்சி், திருப்பதி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர்- மயிலாடுதுறை, திருச்சி - மயிலாடுதுறை ஆகிய பயணிகள் ரெயில்கள் மற்றும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.


தஞ்சையில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் தாமதம் - பயணிகள் அவதி


நீண்ட நேரம் ரயில்கள் புறப்படாமல் நின்றதால் பல பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கினர். பின்னர் அவர்கள் ஆட்டோ, டாக்சி பிடித்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். இதற்கிடையில ரெயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உயர் அழுத்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நள்ளிரவு வரை தொடர்ந்தது. பணி நீண்ட நேரம் நடைபெற்றதால் ரயில்களை இயக்குவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு டீசல் என்ஜின் வரவழைக்கப்பட்டு அதன் உதவியோடு ஆடுதுறை, குத்தாலம் பகுதியில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை இயக்கும் பணியை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டனர்.


தஞ்சையில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் தாமதம் - பயணிகள் அவதி

நேற்று அதிகாலையில்தான் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. லாரி மோதி உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் நேற்றுமுன்தினம் இரவு இந்த மார்க்கத்தில் சென்ற அனைத்து ரயில்களும் சுமார் 3 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை ரயில்வே போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாரி மோதிய உடனேயே மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் வேறு எவ்வித விபத்துக்களும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget