மேலும் அறிய

கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக உருவாகும் அடர்வனம் : தொடங்கிவைத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்..!

கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக ‘கைஃபா’ எனும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் உருவாகும் அடர்வனத்தை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.

கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக ‘கைஃபா’ எனும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் உருவாகும் அடர்வனத்தை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் போராவூரணி அருகே நாடியம் ஊராட்சியில், கிழக்கு கடற்சாலையில் உள்ள பிள்ளையார் திடல் பகுதியில் சுமார் 42 ஏக்கர் அரசு நிலம் கருவேல மரங்கள் மண்டியிருந்தது. இதையடுத்து, ‘கைஃபா’ எனும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தை நிர்வாகிகள், உரிய அனுமதி பெற்று கடந்த 3 மாதங்களாக கருவேல மரங்களை அகற்றி இடத்தை சுத்தம் செய்தனர்.
 
இந்நிலையில், அந்த இடத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக ‘கைஃபா’ அமைப்பு  மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முதற்கட்டமாக 18 ஏக்கரில் மரக்கன்றுகளை நடுவதற்கான துவக்க விழா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது. இதில் கலந்துக்கொண்ட அவர் மரக்கன்றுக்களை நட்டு பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 30 நாள்களில், பொதுமக்களின் வாழ்வாரத்தையும், கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற போராடி வருகிறார்.
 
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கடற்கரை ஒரங்களில், எந்தந்த பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகளை நட முடியும் என்பது குறித்து ஆராய்ந்து மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தினர், மரக்கன்றுகளை நடும் பணியை துவங்கியுள்ளனர். இதில் கொரோனா பெரும் தொற்று காலத்தில், மக்களை காக்க முன்களப்பணியாளராக இருந்து உயிரை இழந்தவர்களின் நினைவுகளை போற்றும் வகையில், அவர்களின் பெயர்களில், மரக்கன்றுகளை நட்டு அடர்வனமாக உருவாக்க உள்ளனர்.  
 
இது போன்ற செயல்கள் தமிழ்நாடு முழுவதும் தொடரும்.  கடலில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலா தலமாக உள்ள மனோரா மிகவும் சிறப்பு மிக்க இடம். இதை மேம்படுத்த முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.
 
இந்நிகழ்ச்சியில் பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பாலசுப்பிரமணியன், கைஃபா நிர்வாகிகள் கார்த்திகேயன், நிமல்ராகவன், நவீன் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget