இதை... இதை நீங்க எதிர்பார்த்தே இருக்க மாட்டீங்க: வெளியான அறிவிப்பால் வாலிபர்கள் உற்சாகம்
மீண்டும் ஐடி துறையில் புதிய அத்தியாயம் பிறப்பதாக கூறப்படுகிறது. வாலிபர்கள் சந்தோஷத்தில் வானம் எட்டுமா என்பது போல் துள்ளிக்குதிக்கின்றனர்.

தஞ்சாவூர்: புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரே நாள் இருக்கும் போது செம சூப்பர் மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகி இருக்கு. அதுவும் இன்போசிஸ் நிறுவனத்திடம் இருந்து. முழு விபரங்கள் உள்ளே...
இந்திய ஐடி துறையில், இன்போசிஸ் தனது AI First திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் வரை தொடக்க சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அப்புறம் என்ன தகுதியுள்ளவர்கள் உடனே உங்க விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைந்த ஆரம்பக்கட்ட சம்பளம் குறித்த கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்லணும். அதுவும் புத்தாண்டு போது செமையாக ஸ்வீட் கொடுத்து இருக்காங்க. முன்னணி நிறுவனமான இன்போசிஸ்தான் அப்படி ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனது AI First திட்டத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் வரை தொடக்க சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு வாலிபர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. உற்சாகப்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.
2025-ஆம் ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய புத்தாண்டு பொங்கல் பரிசு என்று சொல்லலாம். கடந்த பத்தாண்டுகளாக ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் 800 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த நிலையில், ஆரம்பக்கட்ட ஊழியர்களின் சம்பளம் மிக மெதுவாகவே உயர்ந்து வந்தது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், இன்போசிஸ் தற்போது தனது சம்பள விகிதங்களை அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக, ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் பிரிவில் பணியமர்த்தப்படும் எல்-3 (L3) நிலை பயிற்சிப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 21 லட்சமும், எல்-2 (L2) நிலைக்கு ரூ. 16 லட்சமும், எல்-1 (L1) நிலைக்கு ரூ. 11 லட்சமும் ஆண்டு வருமானமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் ஐடி துறையில் புதிய அத்தியாயம் பிறப்பதாக கூறப்படுகிறது. வாலிபர்கள் சந்தோஷத்தில் வானம் எட்டுமா என்பது போல் துள்ளிக்குதிக்கின்றனர். இந்த நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 20,000 புதியவர்களை பணியமர்த்த இன்போசிஸ் இலக்கு வைத்துள்ளது. இதில் முதற்கட்டமாக 12 ஆயிரம் பேர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களை அடுத்த சில மாதங்களில் நிரப்ப திட்டமிட்டு இருக்காங்க. இதற்காக ஆள்சேர்ப்பு முகாம்களை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., மற்றும் கணினி அறிவியல் சார்ந்த எம்.எஸ்.சி பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில், திறமையான இளைஞர்களை கவரும் வகையில் இன்போசிஸ் எடுத்துள்ள இந்த முடிவு மற்ற ஐடி நிறுவனங்களையும் இதுபோன்ற சம்பள உயர்வை வழங்க தூண்டும் என்றால் அது மிகையல்ல. டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிகளுக்குக் குறைந்தபட்சமாக ரூ. 7 லட்சம் முதல் சம்பளம் தொடங்குகிறது என்பதால் இது இளைஞர்களுக்கான ஜாக்பாட். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் கூடுதல் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம். வாலிபர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்பு புத்தாண்டு பரிசுபோல் வந்துள்ளது. மிஸ் பண்ணிடாதீங்க.





















