மேலும் அறிய

தொடர் செம்மண் திருட்டு.. லாரிகளை வளைத்து பிடித்த இந்திய கம்யூ., கட்சியினர்: தஞ்சை அருகே பரபரப்பு

செங்கிப்பட்டி அருகே தொடர்ந்து செம்மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தொடர்ந்து செம்மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டி தெற்குசேத்தி கிராமத்தில் அரசு அனுமதியின்றி தொடர்ந்து செம்மண் திருடப்பட்டு வந்துள்ளது. இரவு, பகல் என எந்நேரமும் இவ்வாறு செம்மண் திருடப்பட்டு வருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் அரசு அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து வந்தனர். இதையடுத்து செம்மண் எடுக்கப்படும் இடத்திற்கு பொதுமக்களோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முகில்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் அய்யாராசு, மாரிமுத்து, சந்திரசேகரன், சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி மற்றும் கட்சியினர் சென்றனர். 

அப்போது தஞ்சாவூர் ஒன்றியம் குருவாடிப்பட்டி கிராமத்தில் செம்மண் எடுக்க அளிக்கப்பட்ட அனுமதியை காட்டி பாளையப்பட்டி தெற்கு சேத்தி கிராமத்தில் தொடர்ந்து செம்மண் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து செம்மண் எடுத்த வாகனங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வளைத்து பிடித்தனர். பின்னர் பூதலூர் வட்டாட்சியர் மற்றும் செங்கிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு செங்கிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஒரு லாரியை மட்டும் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவர் இளவரசன் என்பவரை கைது செய்தனர். 

ஆனால் தொடர்ந்து செம்மண் திருட்டில் ஈடுபட்ட ரமேஷ் என்பவரையும் கைது செய்ய வேண்டும். செம்மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உட்பட மற்ற வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் (பொ) முகமது இப்ராஹிம் புகாரில் குறிப்பிட்டவாறு விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து இந்திய கம்யூ., கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதுபோன்று செம்மண் அரசு அனுமதியின்றி அள்ளப்படுவதால் அப்பகுதியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் செம்மண் அள்ளிய வாகனங்கள் வெகு வேகமாக செல்வதால் விபத்துக்களும் நடக்கிறது. 

பொதுமக்களுக்கு பல்வேறு விதத்திலும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் வேறு இடத்தில் மண் எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதியை வைத்து இங்கு மண் எடுப்பது எந்த வகையில் சரியானது. அதனால்தான் இன்று வாகனங்களை சிறைப்பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

Thanjavur power cut 14.07.2026:
Thanjavur power cut 14.07.2026: "திங்கட்கிழமை சார்ஜிங் திருவிழாங்கோ...... செவ்வாய்க்கிழமை தஞ்சையில் கரண்ட் லீவ்!"
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Embed widget