மேலும் அறிய

கழிவறையுடன் கூடிய குளியல் அறை கட்டிட திறப்பு விழா- குத்துவிளக்கு ஏற்றி திறப்பு விழா கண்ட கிராம மக்கள்!

சீர்காழி அருகே பின்தங்கிய கிராமத்தில் கழிவறையுடன் கூடிய குளியல் அறை கட்டிட திறப்பு விழாவை மா இலை தோரணம், குத்துவிளக்கு ஏற்றி கிராமமக்கள் திறப்பு விழா கண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அடுத்த பெரிய நிம்மேலி கிராமத்தில் ஓர் ஆசிரியர் பள்ளிகளின் சார்பில் கழிவறைகளுடன் கூடிய குளியல் அறைகள் கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 1800 ஒராசிரியர் பள்ளிகளை  நடத்தி வருகிறது. இதன் மூலம் 51 ஆயிரம் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி, சுகாதாரம், நற்பண்புகள் ஆகியவற்றை 1700 கிராமங்களில் செய்து வருகிறது.


கழிவறையுடன் கூடிய குளியல் அறை கட்டிட திறப்பு விழா- குத்துவிளக்கு ஏற்றி திறப்பு விழா கண்ட கிராம மக்கள்!

தற்போது ஓர் ஆசிரியர்கள் பள்ளிகள் சார்பில் 7 மாவட்டங்களில் பின் தங்கிய கிராமத்தில் குளிக்க, இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு கழிவறைகளுடன் கூடிய குளியல்அறைகள் கட்டப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் 60 கழிவறைகளுடன் கூடிய குளியல் அறைகள்  30 லட்சம் ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டு, சீர்காழி அருகே பெரியநிம்மேலி கிராமத்தில் முதற்கட்டமாக 15 கழிவறைகளுடன் கூடிய குளியல் அறைகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.  இதில் மா இலை தோரணம், குத்துவிளக்கு ஏற்றி புதுமனை புகுவிழா போல மகிழ்ச்சியோடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் புதிதாக கட்டப்பட்ட பாத்ரூம்களுக்கு செய்து மகிழ்ந்தனர். 


கழிவறையுடன் கூடிய குளியல் அறை கட்டிட திறப்பு விழா- குத்துவிளக்கு ஏற்றி திறப்பு விழா கண்ட கிராம மக்கள்!

இதனை ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார், ஒராசிரியர் பள்ளிகள் மூலமாக இதுவரை 105 கோயில் குளங்கள் தூர்வாரப்பட்டு,1900 கழிவறைகளுடன் கூடிய குளியலறைகள் கட்டி பாரத பிரதமரின் நற்சான்றிதழை மூன்று முறை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.


மயிலாடுதுறை அருகே நல்லாசிரியர் விருது பெற்ற மாப்படுகை அரசு உயர்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளியான தலைமையாசிரியருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றி வருபவர்  தாமரைச்செல்வி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக சேவையாற்றி வருகிறார். இவர் கடந்த 21 - ஆண்டுகளாக மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி அதனை தொடர்ந்து தாழஞ்சேரி மற்றும் கொற்கை பள்ளிகளிலும் பணியாற்றி இப்போது மாப்படுகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 


கழிவறையுடன் கூடிய குளியல் அறை கட்டிட திறப்பு விழா- குத்துவிளக்கு ஏற்றி திறப்பு விழா கண்ட கிராம மக்கள்!

மாற்றுத்திறனாளியான இவர் மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்திற்கும், தேர்ச்சி விகிதத்திற்கும் தம் வேலை செய்த அனைத்து பள்ளிகளிலும் அரும்பாடுபட்டவர் ஆவார். அவருக்கு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தின விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசினை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும்  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நல்லாசிரியை தாமரைச்செல்விக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


கழிவறையுடன் கூடிய குளியல் அறை கட்டிட திறப்பு விழா- குத்துவிளக்கு ஏற்றி திறப்பு விழா கண்ட கிராம மக்கள்!

அதனைத் தொடர்ந்து நல்லாசிரியை மாற்றுத்திறனாளியான தலைமையாசிரியர் தாமரைச்செல்விக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில் கிராம மக்கள் ஏராளமான பங்கேற்று ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Embed widget