மேலும் அறிய

திருவாரூரில் மழையில் நனைந்ததில் 30,000 நெல்மூட்டைகள் வீண்

காரியமங்களம், சேந்தமங்கலம், இருள்நீக்கி, உள்ளிட்ட கிராமங்களில் தற்காலிக திறந்த வெளி நெல் கிடங்குகளில் வைக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் நெல் முட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி மற்றும் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் செயல்பட்டு வருவதால் பெரும்பாலான காலங்களில் மழை பெய்து நெல் மூட்டைகள் வீணாகி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
 
இவை லாரிகள் மூலம் திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ள அரசு சேமிப்பு நெல் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக திறந்த வெளி நெல் கிடங்குகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தார்பாய் கொண்டு நெல் மூட்டைகள் மூடி வைக்கப்பட்டபோதும் மழையில் நனைந்து நெல் மணிகள் மூடையிளேயே முளைக்க தொடங்கின. காரியமங்களம், சேந்தமங்கலம், இருள்நீக்கி, ஆலத்தூர், அகரவயல், புழுதிக்குடி, நெம்மேலி உள்ளிட்ட கிராமங்களில் தற்காலிக திறந்த வெளி நெல் கிடங்குகளில் வைக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் நெல் முட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்துள்ளது.
 
நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு ஓரிரு தினங்களில் லாரிகள் மூலமாக அரசு அதிகாரிகள் நெல் கிடங்கிற்கு எடுத்துச் சென்றால் இதேபோன்று சேதம் ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், பல திறந்தவெளி கிடங்குகளில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கு எடுத்துச் செல்வதே இதேபோன்று மழையில் நினைந்து நெல்மணிகள் முளைக்க தொடங்குவதற்கு முக்கியமான காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே இனிவரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்த உடனேயே சேமிப்புக் கிடங்கிற்கு நெல் மூட்டைகளை நகர்வு செய்ய வேண்டும்.
 
தற்பொழுது சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் இரண்டு மாத காலங்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக தரமான கட்டிடங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அந்தக் கட்டிடங்களின் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டால் மட்டுமே நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க முடியும் இல்லை என்றால் தற்பொழுது மழையில் நனைந்து வீணாகி உள்ள நெல் மணிகள் அரவை செய்யப்பட்டு அந்த அரிசிதான் ரேஷன் கடைகள் மூலமாக மீண்டும் பொதுமக்களுக்கு தரமற்ற அரசியாக வழங்கப்படும் நிலை ஏற்படும் ஆகவே இதேபோன்ற நிலை ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கான்கிரீட் கட்டிடங்கள் அமைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget