மேலும் அறிய

ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை சரியான முறையில் வனத்துறையினர் சேகரிப்பதில்லை.. எழும் குற்றச்சாட்டு

சீர்காழி அருகே அரிய வகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை எஸ்பி, வன உயிரின காப்பாளருடன் இணைந்து 4000 ஆமை குஞ்சுகளை  கடலில் விட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் அகியோர் தலைமையில் ஆமைக்கு குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை சரியான முறையில் வனத்துறையினர் சேகரிப்பதில்லை..  எழும் குற்றச்சாட்டு

அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி பசிபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும், இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு வரும் கடற்கரை பகுதிக்கு வரும் ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும், இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன.


ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை சரியான முறையில் வனத்துறையினர் சேகரிப்பதில்லை..  எழும் குற்றச்சாட்டு

இதில் இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்ட  கடல் பகுதியில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இட்ட சுமார் 32 ஆயிரம் முட்டைகள்  பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று குஞ்சுகளும் முட்டையில் இருந்து பொறித்து வெளிவந்தது, அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்  சுமார் 4000-க்கும் மேற்பட்ட குஞ்சுகளை நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோர் இணைந்து கூழையார்  கடலில் விட்டனர்.  இவ்வாறு விடப்பட்ட இந்த ஆலிவ் ரெட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விட்ட  நாளிலிருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக மீண்டும் தமிழக கடற் பகுதிக்கு வரும் என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா தெரிவித்தார். இந்நிகழ்வில் சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனத்துறையினர், காவல் துறை மற்றும் அப்பகுதி மீனவர்கள் கலந்துகொண்டனர்.


ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை சரியான முறையில் வனத்துறையினர் சேகரிப்பதில்லை..  எழும் குற்றச்சாட்டு

இந்நிலையில் அப்பகுதி சமுக ஆர்வலர்கள் கூறுகையில், ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டைகளை இரவு 11 மணிக்கு மேல்  தொடங்கி அதிகாலை 5 மணி வரை இரவு நேரங்களில் மட்டுமே சேகரிக்க முடியும், ஆனால் மயிலாடுதுறை கடலோரப் பகுதிகளில் வனத்துறையினர் இரவு நேரங்களில் அவ்வாறு சென்று சரியான முறையில் முட்டைகள் சேமிக்கப்படுவதில்லை என்றும், வெறும் கணக்கு காட்டும் செயலில் தான் இவர்கள் ஈடுபடுவதாகவும், பெரும்பாலும் மீனவர்கள் தான் அதிக அளவில் முட்டைகளை சேகரித்து இவர்களிடம் தருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் வனத்துறையினரின் அலட்சியத்தால்  ஆமை குஞ்சு முட்டைகள் நாய், நரி மற்றும் ஒரு சில மனிதர்களால் சூறையாடப்படுவதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வரும் காலங்களிலாவது வனத்துறையினர் இரவு நேரங்களில் சரியான முறையில் கடற்கரை பகுதிகளில் ரோந்து சென்று அழிந்து வரும் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget