மேலும் அறிய

தஞ்சையில் 100 ஏக்கர் வெற்றிலை சாகுபடி பாதிப்பு - ஏக்கருக்கு 15 லட்சம் செலவு செய்து நாசம்

’’வெற்றிலை சாகுபடி பயிர் காப்பீடு, கடனுதவி, தொழில் நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு இயற்கை வழி உரங்கள் உள்ளிட்டவைகளை வழங்க கோரிக்கை’’

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பூந்துருத்தி, திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, கும்பகோணம், கோவிந்தகுடி, ஆவூர், ராஜகிரி, பண்டாரவாடை, ஆடுதுறை, கல்விக்குடி, அய்யம்பேட்டை, திருவையாறு,  திருவிடைமருதுார், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500  ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனா். வெற்றிலையில் வெள்ளை, பச்சை, பீனங் வெற்றிலை வகைகள் உண்டு. வயலை வெட்டி பாத்தி கட்டி கிடங்கு வெட்டுவார்கள். அதில் அகத்தி கீரை விதை விதைத்து சுமார் 40 நாட்களில் விளைந்து பிறகு, வெற்றிலை கா்ணமாக்கி 3 கனுவை நடுவார்கள். அதன் பிறகு 40 நாட்கள் வளா்ந்து பிறகு பிஞ்சு வெற்றிலையை பறிப்பார்கள். அதிலேயே பெரிய வெற்றிலை சுமாரான வெற்றிலைகளை பறிப்பார்கள். தொடா்ந்து ஒரு ஆள் மட்டத்திற்கு வளா்ந்த பிறகு மேலே கமார் வெடித்து  அதல் உள்ள மார் வெற்றிலையை பறிப்பார்கள்.


தஞ்சையில் 100 ஏக்கர் வெற்றிலை சாகுபடி பாதிப்பு - ஏக்கருக்கு 15 லட்சம் செலவு செய்து நாசம்

இதில் 110 வெற்றிலையை கொண்டது. ஒரு கவுளியாகும், 30 கவுளி என்பது ஒரு முட்டி எனப்படும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.   வாய்க்கால்களில் துார் வாராததால், வெற்றிலை கொடியில் தேங்கியுள்ள மழை நீர் வடிவதற்கு வழியில்லை. இதனால் வெற்றிலை கொடிகள் சுமார் 100 ஏக்கர் வரை முழுவதும் சாய்ந்து விட்டது. வெற்றிலை கொடியில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. வெற்றிலைக்கு தண்ணீர் அதிகமாக இருந்தால், வெற்றிலை கொடி அழுகி விடும். இதனால் வெற்றிலை சாகுபடி பெரிதும் பாதிக்கும்.

மேலும் விளைச்சலான வெற்றிலைகள் சுருங்கியும், சிறுத்தும், அழுகி விடுவதால், போதுமான விலைக்கு வெற்றிலையை விற்பனை செய்ய முடியாது. இதனால் வெற்றிலை விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.தற்போது வெற்றிலை விவசாயிகள், கடந்த சில நாட்களாக, தண்ணீர், உரம், இழப்பு போன்ற பல்வேறு பிரச்சனையால் வேறு தொழிலுக்கு மாறியதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் வெற்றிலை என்ற சூழ்நிலை மாறி, வெளியூரிலிருந்து வெற்றிலை விற்பனைக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.


தஞ்சையில் 100 ஏக்கர் வெற்றிலை சாகுபடி பாதிப்பு - ஏக்கருக்கு 15 லட்சம் செலவு செய்து நாசம்

 

இது போன்ற சூழ்நிலையால் வரும் நாட்களில் வெற்றிலையின் விலை   அதிகமாக உயர வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள  பாதிப்பிற்கு சாகுபடிக்காக செய்த செலவினங்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வெற்றிலை விவசாயி திருப்பூந்துருத்தி சுகுமாறன் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழையினால் 100 ஏக்கர் வெற்றிலை சாகுபடி அடியோடு சாய்ந்துள்ளது. வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள், அரசிடமிருந்து எந்தவிதமான பயிர் காப்பீட்டு உள்ளிட்ட எந்த உதவிகளும் பெறப்படுவதில்லை. இருந்தாலும், பல தலைமுறைகளாக செய்து வரும் வெற்றிலை சாகுபடியை செய்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழையால் வெற்றிலை சாகுபடி பயிர்கள் அனைத்து சாய்ந்து விட்டன. இதனால் அனைத்தும் பயிர்கள் நாசமாகியுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார்  15 லட்சம் செலவாகும்.  வெற்றிலை மற்றும் திராட்சை சாகுபடிக்கு தான் அதிகமாக செலவாகும்.  இது போன்ற நிலையால் வெற்றிலை விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, வெற்றிலை சாகுபடி பயிர் காப்பீடு, கடனுதவி, தொழில் நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு இயற்கை வழி உரங்கள் உள்ளிட்டவைகளை வழங்கவேண்டும். மழையினால் பாதிக்கப்பட்ட வெற்றிலை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget