மேலும் அறிய

தஞ்சையில் 75 ஆண்டுகளாக குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

குளம் என்று தெரிந்து மின்சாரம் மற்றும் குடிநீர் வரி வசூலித்த அலுவலர்களையும், அதிகாரிகளையும் விசாரணை செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் அந்த பகுதியில் உள்ளது. இந்த குளம் அந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்ததுடன், ஆதாம் கால்வாய் பாசன வாய்க்காலின் முதல் குளமாக திகழ்கிறது.தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 1803ஆம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னர் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளார். இக்கோயிலின் மூலவராக எல்லையம்மன் உள்ளார். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி உள்ளது. முன்பாக பலி பீடம் உள்ளது. மூலவர் சன்னதியில் எல்லையம்மன் என்கிற ரேணுகாதேவி உள்ளார். சன்னதியின் வலப்புறம் விநாயகர் உள்ளார். முன் மண்டபத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. திருச்சுற்றில் தஞ்சன், மாதங்கி, ஸ்ரீதாரங்கன் சன்னதி உள்ளது. அடுத்து வரிசையாக நாகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து காடாரேவ் மாதா, பூரணை புஷ்கலையுடன் அய்யனார், நாக கன்னிகைகள் உள்ளார். சண்டிகேஸ்வரி சன்னதி, ஞான பைரவர் சன்னதியும் காணப்படுகின்றன. மிகவும் சக்திவாய்ந்த எல்லையம்மனை அப்பகுதியை சேர்ந்தவர்கள், குலதெய்வமாகவும், வீட்டு காவல் தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.


தஞ்சையில் 75 ஆண்டுகளாக குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

இத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சை எல்லயம்மன் கோயிலில், மாநகராட்சி நிர்வாகத்தின் குளம் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான குளம் அந்த பகுதியில் உள்ளது. இந்த குளம் அந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்ததுடன், ஆதாம் கால்வாய் பாசன வாய்க்காலின் முதல் குளமாக திகழ்கிறது.சுமார் 75 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளாததால், பொது மக்கள், குளத்தை துார்த்து வீடுகளை கட்டிகொண்டு வசித்து வந்தனர்.

இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் வீடுகள் கட்டப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புகள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீடுகளை சுற்றி வேலியும் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மேட்டு எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர். இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு, கடந்த 24-2-2021ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும் கோர்ட்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறும் அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியவர்களுக்கு அகற்றுமாறு நோட்டீசும் அனுப்பியது.இதனை தொடர்ந்து,மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் கோவில் குளத்தில் கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.


தஞ்சையில் 75 ஆண்டுகளாக குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,கோயில் குளம் என்று தெரிந்தும், வீட்டு வரி, மின்சாரம் குடிநீர் இணைப்பு,  அதற்கு வரி என அனைத்தும் செலுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு குளம் என்று தெரிந்து வரி வசூலித்த அலுவலர்களையும், அதிகாரிகளையும் விசாரணை செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏழை எளிய பொது மக்களிடம் பணத்தை பெற்று கொண்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வேதனையான செயலாகும். கடந்த ஆட்சி காலங்களில் குளத்தை துார் வார வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். தற்போதுள்ள மாநகராட்சி அதிகாரிகள், அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு, எங்கள் பகுதி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget