மேலும் அறிய

விளைச்சலை குறைத்த கடும் பனிப்பொழிவு: தஞ்சையில் விலை உயர்ந்தது வாழை இலை

வாழை இலைகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக போதிய விளைச்சல் இல்லாமல் வாழை இலை அறுவடை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் கேரளா, வெளி மாவட்ட வியாபாரிகள் வாழை இலை கொள்முதலுக்காக தஞ்சையை நோக்கி படையெடுப்பதால் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியான திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், மேலத்திருப்பூந்துருத்தி, வளப்பக்குடி, வடுகக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

இதே போல் வாழை இலைகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் சென்னைக்குத்தான் தனியார் பஸ்கள் மற்றும் லோடு ஆட்டோக்களில் அனுப்பி வைக்கப்படும்.

விளைச்சலை குறைத்த கடும் பனிப்பொழிவு

இந்த நிலையில் தற்போது குளிர்காலம் என்பதால் கடும் பனிப்பொழிவு காணப்படுகின்றன. இந்த பனிப்பொழிவு காரணமாக வாழை இலை விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் வாழை இலை விளைச்சல் முற்றிலும் குறைந்துள்ளதால் அங்கு வாழை இலை கட்டு 7 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்திலும் கடும் பனிப்பொழிவு காரணமாக வாழை இலை விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வாழை இலை அறுவடை பாதியாக குறைந்துள்ளது. 25 லட்சம் வாழை இலைகள் தினமும் அறுவடை செய்யப்படும் பகுதிகளில் தற்போது 10 முதல் 15 லட்சம் அளவுக்குத்தான் வாழை இலைகள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

விலை உயர்ந்தது... வெளி மாநில வியாபாரிகளும் குவிந்தனர்

இதனால் தஞ்சை பகுதிகளிலும் வாழை இலைகள் விலை உயர்ந்து வருகிறது. மேலும் கோவில் விழாக்கள், புத்தாண்டு, அய்யப்ப பக்தர்கள் பூஜை போன்றவற்றின் காரணமாக வாழை இலைகளின் பயன்பாடும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒருபுறம் இலையின் விலை உயர்ந்தாலும், மறுபுறம் விளைச்சலும் குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்புதான் ஏற்பட்டுள்ளது.

தற்போது தஞ்சை பகுதிகளில் ஏடு இலை ஒன்று ரூ.2.50-க்கு விற்ற நிலையில் விலை உயர்ந்து ரூ.3.50-க்கும், ரூ.3-க்கு விற்ற நுனி இலை ரூ.4-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தற்போது தஞ்சையை நோக்கி வெளி மாவட்ட வாழை இலை வியாபாரிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக திருவையாறு பகுதிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் தஞ்சையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் வாழை இலை விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வாழை விவசாயி வடுகக்குடி மதியழகன் கூறுகையில், தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக வாழை இலை விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இலை விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், விலை உயர்வு சற்று ஆறுதலை அளித்து வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டம், கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து திருவையாறு பகுதிகளில் வாழை இலையை கொள்முதல் செய்து செல்கிறார்கள். இதனால் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Embed widget