மேலும் அறிய

தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் நாகைதான் முதலிடம் - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மாநில சாராசரியைவிட அதிக அளவு தடுப்பூசியை செலுத்திய மாவட்டமாக நாகை உள்ளது - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நாகை மாவட்டம் ஒரத்தூரில் ரூ.366.35 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கடந்த மாதம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
 
அப்போது நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்காக அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனிஷ்குமார் என்ற மாணவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.
 


தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் நாகைதான் முதலிடம் - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
 
இதைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கொரோனா வைரஸ்  தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் அலை ஏறும்போது எல்லோரும் பயம், அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். அலை சற்று குறைந்த பிறகு மக்கள் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. அரசு காட்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்வது இல்லை.
 
ஒவ்வொரு நாளும், வாரந்தோறும் தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை 9.67 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுவரை உள்ளவர்களுக்கு இதுவரை 26 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 80 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணையாக 5.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 
 

தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் நாகைதான் முதலிடம் - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
 
இது 16.34 சதவீதம் ஆகும். அதே போல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 5.25 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது-. இது 90.78 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணையாக 4 கோடியே 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 70 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணை தடுப்பூசி ஒருகோடி பேர் போடவில்லை.
 
இது குறித்து கேட்டால் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துவிட்டது என கூறுகிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்ட உடனே நோய் எதிர்ப்பு சக்தி வராது. 2 வாரத்திற்கு பிறகுதான் எதிர்ப்பு சக்தி வரும். பூஸ்டர் தடுப்பூசி 34 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 7.17 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்னுரிமை பெற்றுள்ளனர்.
 

தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் நாகைதான் முதலிடம் - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

 
இதில் இதுவரை 4.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படுகிறது. தடுப்பூசிகளை போட மக்கள் தானாக முன்வரவேண்டும். நாகை மாவட்டத்தில் முதல் தவணையாக 84 சதவீதமும், இரண்டாம் தவணையாக 75 சதவீதமும் தடுப்பூசி செலுத்தி மாநில சாராசரியைவிட அதிக அளவு தடுப்பூசியை செலுத்திய மாவட்டமாக நாகை உள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் விதிகளை மீறியதாக 60 லட்சம் பேருக்கு ரூ.110 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை நான் பெருமையாக சொல்லவில்லை. வேதனையுடன் சொல்கிறேன். வெளியில் செல்லும்போதும், கூட்டமாக இருக்கும் இடங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை அதிகாரிகள் வற்புறுத்தாமல் தாமாகவே முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோல் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 
 

தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் நாகைதான் முதலிடம் - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
 
 
நோய்த்தடுப்பு மற்றும் நோயை வராமல் தடுக்க பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்த முன்வரவேண்டும். விழிப்புணர்வுகள் பழக்கவழக்கமாக மாற வேண்டும்” என்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Breaking News LIVE: ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Breaking News LIVE: ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget