மேலும் அறிய

’கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் படுத்தப்படுக்கையான நபர்’ - அரசு உதவி செய்ய கோரிக்கை

’’சீர்காழி அருகே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர் கை,கால் முடங்கி,படுத்த படுகையில் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் கடந்த ஜனவரி  மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக சமூக ஊடக தளம் ஒன்று நாடு முழுவதும் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், இந்தியாவில் கோவிஷீல்ட் முதல் தவணை செலுத்திக் கொண்ட 70 சதவீதம் பேருக்கும், கோவேக்ஸின் முதல் தவணை செலுத்திக் கொண்ட 64 சதவீதம் பேருக்கும் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும், பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சாதாரண பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது என்றும், அதுபோல கோவிஷீல்ட் இரண்டாம் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 75 சதவீதம் பேருக்கும், கோவேக்ஸின் இரண்டாம் தவணை செலுத்திக் கொண்ட 78 சதவீதம் பேருக்கும் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.  பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சாதாரண பாதிப்பையே ஏற்படுத்தியிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.


’கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் படுத்தப்படுக்கையான நபர்’ - அரசு உதவி செய்ய கோரிக்கை

அதேநேரத்தில் கோவிஷீல்ட் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 சதவீதம் பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் 29 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், ஒரு சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளன. கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், அதில் ஒரு சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.


’கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் படுத்தப்படுக்கையான நபர்’ - அரசு உதவி செய்ய கோரிக்கை

அதுபோல கோவிஷீல்ட் இரண்டாம் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 4 சதவீதம் பேருக்கு தடுப்பூசிக்குப் பின் கொரோனா தொற்றும், ஒரு சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 17 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 2 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றும், 3 சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


’கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் படுத்தப்படுக்கையான நபர்’ - அரசு உதவி செய்ய கோரிக்கை

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான முகமது இஸ்மாயில் முனவர்தீன். இவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். முகமது இஸ்மாயில் முனவர்தீன். கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி மேலச்சாலை கிராமத்தில் அரசுப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாமில் சென்று தடுப்பூசி செலுத்தியுள்ளார். அப்பொழுது தடுப்பூசி செலுத்தியதில் இருந்து உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கை, கால்கள் மறத்துப்போன நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகி இது தொடர்பாக தெரிவித்துள்ளார். 


’கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் படுத்தப்படுக்கையான நபர்’ - அரசு உதவி செய்ய கோரிக்கை

தொடர்ந்து அவரை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர் அவருக்கு சிறிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் ரத்த உரைதல் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக 40 யூனிட் ரத்தத்தை சுத்தபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் செய்வதறியாது தவித்து உள்ளார். தொடர்ந்து ரத்தத்தை சுத்த படுத்த ரூபாய் 4 லட்சம் வரை செலவு செய்து உள்ளார். அப்படியிருந்தும் முழுவதுமாக குணமாகமல் தற்போது படுத்த படுக்கையில் உள்ளார். நடக்க முடியாமலும், உணவு உண்ண முடியாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார், அரசு மருத்துவ காப்பீடும் கை கொடுக்காததால் மேல்சிகிச்சை தொடர முடியாமல் கவலை அடைந்துள்ளார். மேலும் இது தொடர்பாக அரசு உரிய விசாரணை செய்து தகுந்த இழப்பீடு வழங்கவூம், மேல் சிகிச்சை செய்ய அரசுக்கு கோரிக்கை  வைத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Embed widget