மேலும் அறிய
ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்யும் மாணவர்கள் - பெற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் விடுக்கும் கோரிக்கை
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயணத்தில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்யும் மாணவர்கள் - பெற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் விடுக்கும் கோரிக்கை government bus from Nagai to Mayiladuthurai, the students stood on the bus steps without realizing the danger TNN ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்யும் மாணவர்கள் - பெற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் விடுக்கும் கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/603984a3fb90850bff6632fe918dff7a1676017329870113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
படியில் பயணம் செய்யும் மாணவர்கள்
நாகையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் அரசு பேருந்தில் ஆபத்தை உணராமல் பேருந்து படியில் நின்று மாணவர்கள் பயணம் செய்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயணத்தில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஓட்டுநர் உரிமையில்லாமலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் வாகனம் ஓட்டுவதாக புகார் இருந்த நிலையில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து சாலை விதி மீறல் மற்றும் உரிய ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.
![ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்யும் மாணவர்கள் - பெற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் விடுக்கும் கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/d1103fc673cf3f58083c069f3ff1d6931676017520319113_original.jpg)
இந்த நிலையில் பேருந்தில் அதிக கூட்டம் உள்ளதால் மாணவர்கள் படியில் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்து படியில் பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தியும் மாணவர்கள் செவி சாய்க்காமல் ஆபத்தை உணராமலும் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். நாகையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் அரசு பேருந்தில் (440,a) மாணவர்கள் புத்தகப் பையை முதுகில் மாட்டியபடி ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்யும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் பேருந்தில் பாதுகாப்புடன் பயணம் செய்வது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion