மேலும் அறிய

ஈரோடுல ஈமு கோழின்னா...! தஞ்சாவூருக்கு இயற்கை விவசாயம் - ஏமாற்றிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

’’தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் பேரிடம் 10 கோடிக்கு மேல் பணம் பெற்று, ஏமாற்றிவிட்டார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேரிடம் பல கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றியதாக புகார்’’

நிலத்தின் மீது முதலீடு மற்றும் இயற்கை விவசாயம் செய்து அதில் விளையும் பொருட்களை ஏற்றுமதி செய்வதால் அதிக லாபம் கிடைப்பதாக கூறி, பொதுமக்களிடம் பணம் முதலீடாக பெற்று ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம்  மனுக்களை வழங்கினர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,  பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த, வாழ வழி வகுக்கும் மக்கள் நல முன்னேற்ற நலச்சங்க தலைவர் நாகராஜன் தலைமையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.

தாய், மகனை கடத்தில் சொத்தை அபகரிக்க முயற்சி - 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னையை தலைமையிடமாக கொண்டு தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார்குடி,  திருச்சி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் (ஏசிஐஆர் வெல்த் டெவலப்பர்ஸ் பார்ம் இந்தியா) தனியார் நிறுவனத்தினர், நிலத்தின் மீது முதலீடு,  இயற்கை விவசாயம் செய்து அந்த உணவுப் பொருளை ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி மாதத் தவணையாகவும், ஒரே மொத்த தவணையாகவும் பணம் செலுத்தினால், ஐந்து ஆண்டுகள் முடிவில் வட்டியும் சேர்த்து தருவதாக கூறியுள்ளனர். இந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக அன்பழகனும் மற்றும் ஜெர்லீன், பிரபாகரன், ரமேஷ், ராஜசேகரன், ஜோதிபாசு, ரதீஸ் ஆகியோர்கள் இயக்குனர்களாக இயங்கி வந்தனர். இததையடுத்து தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலரும் பணம் வழங்கியுள்ளனர். பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீதும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டில் பணம் கட்டி முடித்த சிலருக்கு மட்டும் முதிர்வு தொகை வழங்கப்பட்டது.


ஈரோடுல ஈமு கோழின்னா...! தஞ்சாவூருக்கு இயற்கை விவசாயம் - ஏமாற்றிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அதற்கு பிறகு யாருக்கும் பணம் திரும்ப தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் தருவதாக கூறி, கடந்த நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி  வருகின்றனர். இந்த நிறுவனத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் 10 கோடி கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். எனவே, இந்த நிறுவனத்தை  சேர்ந்த அன்பழகன், அவர் மனைவி ஜெர்லின் மற்றும் இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நலமுடன் வாழ வேண்டி அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தருமபுரியில் சிறப்பு வழிபாடு

ஈரோடுல ஈமு கோழின்னா...! தஞ்சாவூருக்கு இயற்கை விவசாயம் - ஏமாற்றிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கும்பகோணம் முச்சந்தி கொரோனா தடுப்பூசி முகாம் -100 நாட்களில் 21,174 பேருக்கு தடுப்பூசி

 

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,இந்த நிறுவனத்தை நம்பி கடன்களையும், சொந்த இடங்களையும் விற்பனை செய்து, அதில் வந்த பணத்தை, செலுத்தினோம். ஆனால் சில மாதங்கள் மட்டும் கொடுத்து விட்டு, அதன் பிறகு சுமார் 4 ஆண்டுகளாக வழங்கவில்லை. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கெஞ்சி கேட்டு கொண்டதால், நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தோம். இதனால் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கடன் கொடுத்தவர்கள், எங்களை தொல்லை செய்கிறார்கள். நம்பிக்கை துரோகம் செய்த இந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை பெற்று தர வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் பேரிடம் 10 கோடிக்கு மேல் பணம் பெற்று, ஏமாற்றிவிட்டார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேரிடம் பல கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றியுள்ளார்கள் என்றனர்.

தங்க மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் மனமுடைந்து தாய், தந்தை தற்கொலை

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Embed widget