மேலும் அறிய

நாகை: கோடியக்காடு கடற்கரையில் ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு - போலந்தை சேர்ந்தவர் கைது

கோடியக்காடு கடற்கரையில் ஒதுங்கிய ஆளில்லாத மர்ம படகு. இலங்கையிலிருந்து மிதக்கும் படகு மூலம் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டா கைது செய்து தீவிர விசாரணை.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடற்கரையில் காற்று நிரப்பி நீரில் செல்லும் 14 அடி நீளம் உள்ள படகு ஆளில்லாமல் கரை ஒதுங்கியுள்ளது. அந்தப் படகில் இரண்டு உயிர் கவச உடை, காற்றடிக்கும் பம்ப் ஒன்று, 16 தண்ணீர் பாட்டில்  ஆகியவை இருந்தன. இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், கடலோரக் காவல்படையினர், கடற்படையினர், வனச்சரகர் அயூப் கான் தலைமையிலான வனத்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாகப்பட்டினத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து காட்டுப் பகுதி வரை சென்றது. இந்த ஆள் இல்லாத படகில் வந்தவர்கள் பயங்கரவாதிகளா? கடத்தல்காரர்களா? அல்லது அகதிகளா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 

நாகை: கோடியக்காடு கடற்கரையில் ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு - போலந்தை சேர்ந்தவர் கைது
 
மேலும், ட்ரோன்கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்தினார். இந்த நிலையில் கோடியக்காடு கடற்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த மிதவை படகில் வந்தது போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டா என்ற 39 வயதான நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டா என்பவர் சென்னை செல்ல வழி கேட்டு சந்தேகத்து இடமான வகையில் சுற்றித்திரிந்தார். அந்த நபரை ஆற்காட்டு துறை கிராம மக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கை நீதிமன்றம் அடிதடி வழக்கில் கைது செய்து அவரை சிறையில் அடைத்து பாஸ்போர்ட்டை முடக்கியது. இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட போலந்து நாட்டை சேர்ந்த நபர் காற்று அடித்த ரப்பர் படகின் மூலம் இந்திய கடல் எல்லை வழியாக கோடிக்காடு வந்ததும் அங்கிருந்து டெல்லி சென்று தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற்றுக் கொண்டு அவர் சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு கோடிக்காடு படகுமூலம் வந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் கடலோர காவல்துறையினர், உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget