மேலும் அறிய

ஒக்கி புயலால் இறந்த மீனவர்கள்; குடும்பத்தில் ஒருவருக்கு பணி - தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தமிழக அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மீனவர்கள் முன்வைத்தனர்.

ஒக்கி புயலால் கடலில் மூழ்கிய சாமந்தான்பேட்டை மீனவரின் விசைபடகுக்கு இழப்பீடும்,  உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என நாகையில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
நாகை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், நாகூர், கோடியக்கரை புஷ்பவனம் ஆற்காடுதுறை உள்ளிட்ட  மீனவ கிராமத்தைச் சேர்ந்த  தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்  தமிழக மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மீனவர்களுக்கு வழங்கினார்.
மாவட்டத்தில் சுனாமி பாதிப்பின் போது அனைத்து மீனவர்களுக்கு வழங்கப்பட்ட  வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும், மீனவர்கள் சமுதாயத்தை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும், ஒக்கி புயலில் மூழ்கிய சாமந்தான்பேட்டை மீனவரின் விசைபடகுக்கு இழப்பீட்டு தொகையும்,  உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தமிழக அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மீனவர்கள் முன்வைத்தனர். அவர்களிடம் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தெரிவித்த போது தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்துகிறது என்பதை நம்பியார் மீனவ கிராமத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
மாவட்டத்தில் பல்வேறு மீனவர் கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது தங்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார் .
 
இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் ரஞ்சித்சிங், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ஜெயராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget