மேலும் அறிய

களைப்பு நீங்கவும், கடவுளை வேண்டியும் நாட்டுப்புற பாடல்களை பாடி சம்பா நாற்று நட்ட பெண் விவசாய தொழிலாளர்கள்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்யதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் வருண பகவானை நம்பி சம்பா நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இதை ஒட்டி சம்பா நடவுப்பணியின் போது பெண் தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்கவும், கடவுளை வேண்டியும் நாட்டுப்புறப்பாடல்களை பாடினர்.
 
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது.

இதற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் இருந்து அணை திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். நடப்பாண்டு காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து 16-ம் தேதி கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் பகிர்ந்து விடப்பட்டது.

இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். 5.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நிலையில், போதிய அளவு தண்ணீர் இல்லாததால் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. எஞ்சிய நெற்பயிர்கள் முற்றிய நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


களைப்பு நீங்கவும், கடவுளை வேண்டியும் நாட்டுப்புற பாடல்களை பாடி சம்பா நாற்று நட்ட பெண் விவசாய தொழிலாளர்கள்

 

மேலும் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்யதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் சாலைகளில் விவசாயிகள் காய வைத்த நெல்லும் நனைந்தது. இதனாலும் விவசாயிகள் வேதனையடைந்தனர். தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தின் அளவு குறித்து கெடுபிடி செய்யாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பா பருவத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்க கோரி தொடர் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகள் சம்பா நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரத்தநாடு அருகே பாச்சூர் கிராமத்தில் நடவு பணியில் ஈடுபட்ட பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்கவும்,  கடவுளை வேண்டியும் முருகன் பக்தி பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களை பாடி நடவு பணியை மேற்கொண்டனர். காலை முதல் மதியம் வரை இடைவெளியின்றி நாற்று நடுவதால் ஏற்படும் சோர்வை போக்கும் விதமாக பெண் தொழிலாளர்கள் நாட்டுப்புறப் பாடல்களை ராகம் போட்டு பாடினர். இதை அவ்வழியே சென்றவர் ரசித்துக் கொண்டே சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவிரியில் தண்ணீர் திறக்க ஒரு பக்கம் போராட்டங்கள் நடந்து வந்தாலும் சம்பா பயிரை காக்க வருண பகவான் நிச்சம் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கையில் டெல்டா விவசாயிகள் மழையை நம்பி களத்தில் இறங்கி உள்ளனர். விவசாயிகளின் நம்பிக்கைக்கு முக்கிய காரணம் வரும் 27-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது தான்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
Embed widget