மேலும் அறிய

சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றினாலே போதும்... விளை நிலங்களை அழிக்க கூடாது

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் கருப்புக் கொடியுடன் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். திருவையாறு கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பலருக்கும் பல்வேறு வகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டே வந்தது.

பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து புறவழிச்சாலை அமைக்க திருவையாறு, கண்டியூர், மணக்கரம்பை , கீழ திருப்பந்துருத்தி, கல்யாணபுரம் உள்ளிட்ட ஊர்களில் 100 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளுக்கான அளவீடும் எடுக்கும் பணிகளும் நடந்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

மேலும், மூன்று போகம் விளையும் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.



சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றினாலே போதும்... விளை நிலங்களை அழிக்க கூடாது

இந்நிலையில் காட்டுக்கோட்டையில் நடவு செய்யப்பட்டிருந்த வயலில், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் எனக் கூறி நெடுஞ்சாலை துறையினர் பயிர்களை அழிக்க முயன்றனர். இதையறிந்த விவசாயிகள், பெண்கள் பொக்லைன் இயந்திரத்தை மறித்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த திருவையாறு தாசில்தார் பழனியப்பன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை போராட்டத்ததை விவசாயிகள் கைவிட்டனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில்,  திருவையாறு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை செய்யாமல், விளைநிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், முறையான அளவீடு செய்யாமலும், உரிய இழப்பீடும் அறிவிக்காமல் பணிகளில் அரசு ஈடுபடுவதை நீதிமன்றம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

முன்னதாக கிராம சபை கூட்டத்தின் போதே விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம மக்கள் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழ திருப்பந்துருத்தி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் காயத்ரி ரமேஷ் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம  மக்கள்,விவசாயிகள் சிலர் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்தும், சங்கு ஊதியபடி கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.  


சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றினாலே போதும்... விளை நிலங்களை அழிக்க கூடாது

மேலும், பெரம்பலுார் –  மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரசூர், காட்டுக்கோட்டை, கீழ திருப்பந்துருத்தி, நடுபடுகை, தில்லைஸ்தானம், திருவையாறு, அந்தணர் குறிச்சி வழியாக விளாங்குடி சாலை இணைப்பு திட்டமாக சுமார் 8 கிலோமீட்டர் வரையில், நிலங்களை கையகப்படுத்தி புறவழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

புறவழிச் சாலை அமைக்கப்பட்டால்,  உளுந்து, தென்னை, வாழை உள்ளிட்ட விளை நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, கண்டியூர், நடுக்கடை, திருவையாறு ஆகிய பகுதிகளில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றினால், போக்குவரத்து பாதிக்காது, விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தினால், வாழ்வாதாரம் கேள்வி குறியாகும் என மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget