மேலும் அறிய

கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: கஞ்சி காய்ச்சி குடித்து காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை காத்திருக்கும் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை காத்திருக்கும் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர். பின்னர் தஞ்சாவூர் எம்.பி. முரசொலி பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஏரிகளை நிரப்ப அரசு உத்தரவு

புதிய கட்டளை மேட்டு கால்வாய் மூலம் தஞ்சாவூர் மாவட்ட ஏரிகளை நிரப்ப கடந்த ஜூலை மாதம் இறுதியில் தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் அவ்வாறு செய்யப்படவில்லை. இதனால் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது 15 நாட்களில் அனைத்து ஏரிகளையும் நிரப்பித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தண்ணீர் தராததை கண்டித்து இன்று காலை முதல் விவசாயிகள் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர்.

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். இதில் மதிமுக நந்தகுமார், காங்கிரஸ் அறிவழகன், மாதர் சங்கம் தமிழ்ச்செல்வி, சிபிஎம் பாஸ்கர், அமமுக கிருபா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஊராட்சி தலைவர் கருப்பையா, டிஒய்எப்ஐ தமிழ்செல்வன், ஒன்றிய துணை பெருந்தலைவர் கோ.வி.க. சுப்பு, விவசாய தொழிலாளர் சங்க காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினர்

பின்னர் விவசாயிகள் அனைவரும் கால்வாயில் இறங்கி கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கேயே கஞ்சி சமைத்து சாப்பிட்டனர். தொடர்ந்து தகவல் அறிந்த தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி நேரடியாக வருகை தந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும் பத்து நாட்களுக்குள் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து நாளை காலை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு இனி இவ்வாறு நடக்காமல் இருக்க தீர்வு காணப்படும். என்று உறுதியளித்தார். இதன் பேரில் விவசாயிகள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை மாலை கைவிட்டனர்.

20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது

குளித்தலை மகாதானபுரம் தலைப்பிலிருந்து துவாக்குடி பொய்கை குடியில் உள்ள ஏரிக்கு தண்ணீர் வரும். அங்கிருந்து புதியகட்டளை மேட்டு கால்வாய்க்கு தண்ணீர் வந்து அதன் வாயிலாக 80 ஏரிகள் பாசன வசதியை பெறுகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சாகுபடியை மேற்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஒருமாதம் ஆன நிலையிலும் இங்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்ொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இங்கு ஏரிகள் நிரம்பினால் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இதை கருத்தில் ொண்டு அரசு உடன் நடவடிக்கை மேற்ொள்ள முடியும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். நாளை காலை நடக்கும் ஆலோசனைக்கூட்டத்தில் இந்த கால்வாய்க்கு தண்ணீர் விடப்பட்டால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள விவசாயிகளின் இந்த கோரிக்கை உடனடியாக தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget