மத்திய அரசு நிறுவனத்தில் அருமையான தொழிற்பயிற்சி வாய்ப்புங்க!!!
ரயில்வே துறையில் பயிற்சி பெற விரும்புகிறீர்களா? மத்திய அரசு ரைட்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர்: மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. இதை மிஸ் பண்ணிடாதீங்க. ரயில்வே துறையின் கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பட்டதாரி, டிப்ளமோ மற்றும் தொழிற்பிரிவு இடங்களுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். செம சூப்பர் வாய்ப்புங்க.
ரயில்வே துறையில் பயிற்சி பெற விரும்புகிறீர்களா? மத்திய அரசு ரைட்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பு மட்டுமின்றி, பொறியியல் அல்லாத டிகிரி படிப்புகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி 1961 கீழ் 1 வருட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 2025-26 ஆண்டில் மொத்தம் 252 இடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனம் ரைட்ஸ் (RITES) ஆகும். பல்துறை பொறியியல் வேலைகள் மட்டுமின்றி கன்சல்டண்சி நிறுவனமாகவும் செயல்படுகிறது.
பொறியியல் பட்டதாரிகள் 110
பொறியியல் அல்லாத பட்டதாரிகள் 36
டிப்ளமோ தகுதி 36
ஐடிஐ தகுதி 49
மொத்தம் 252
பொறியியல் பட்டதாரிகளுக்கான பிரிவில் சிவில், கட்டக்கலை, எலெக்ட்ரிக்கல், சிக்னல், மெக்கானிக்கல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகள் நிரப்பப்படுகிறது.
பொறியியல் அல்லாத பட்டதாரிகள் பிரிவில் நிதி மற்றும் ஹெச்.ஆர் இடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ தகுதியின் கீழ் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், வேதியியல் நிரப்பப்படுகிறது. ஐடிஐ தகுதியின் கீழ் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் இதர தொழில்கள் உள்ளன. 17.11.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 18 வயதை நிறைந்து இருக்க வேண்டும்.
பொறியியல் பிரிவிற்கு மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். பொறியியல் அல்லாத இடங்களுக்கு BA/BBA/B.Com/B.Sc./BCA ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். மேலும், மேல் குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களாக இருக்க வேண்டும்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையாக பயிற்சி காலம் வரை அளிக்கப்படும். பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கும் மாதம் ரூ.14.,000 வழங்கப்படும். டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12,000 மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.
ரைட்ஸ் நிறுவன தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்கள் அவர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவேளை விண்ணப்பதார்களின் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால், வயதில் மூத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே, தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.
ஆர்வமுள்ளவர்கள் இதற்கான அறிவிப்பை https://www.rites.com/Career என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தொடர்ந்து, https://nats.education.gov.in/student_type.php மற்றும் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளங்களின் வழியாக பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, https://apprentice.rites.com:444/ApprenticeForm என்ற இணைப்பில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. டிசம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும். தேர்வு பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்
இப்பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து இளைஞர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் மத்திய அரசு நிறுவன தொழிற்பயிற்சி வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். எனவே தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் பகுதியை சேர்ந்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க.





















