மேலும் அறிய

மேட்டூர் அணை திறப்பை முன்பே அறிவிக்க வேண்டும்; மாஜிஅமைச்சர் காமராஜ்

மேட்டூர் அணையில் நீர் திறப்பதை முன்பே தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பதை முன்கூட்டியே தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்.
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு காய்கறி அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு மாவட்ட அதிமுக சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி திருவாரூர் நகராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை முன்னாள் அமைச்சர் காமராஜ் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது...
 
‛‛கொரானா இரண்டாவது அலை தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. கொரானா தொற்றை தடுக்கும் வகையில் அதிக கொரானா பரிசோதனைகள் செய்ய வேண்டும். அப்படி எடுத்தால் தான் தொற்றை குறைப்பதற்கு வழி வகுக்கும். எனவே தொற்று இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனைகள் அதிக அளவில் எடுக்க வேண்டும். அதேபோன்று தமிழக அரசு பொதுமக்களுக்கு கொரானா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களை வீட்டில் தனிமையில் இருந்து கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறுவது, பொதுமக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே கொரோனா கேர் சென்டர்களை அதிகப்படுத்தி அவர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து தொற்று இல்லை என முடிவு வரும்வரை சிகிச்சை அளித்து அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
 
டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடுவதற்கு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. நமக்கு கர்நாடகாவிலிருந்து தர வேண்டிய தண்ணீரை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னால் தண்ணீர் திறக்க போகிறோம் என்கிற அறிவிப்பினை முன்கூட்டியே தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் விவசாயிகள் அதற்கான பணிகளை தொடங்குவார்கள்.
 
புதிய அரசு தற்போதுதான் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. யாரையும் உடனடியாக குற்றம் சொல்வதற்கு இல்லை. இன்னும் பணிகளை கூடுதலாக செய்ய வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும். முதல் தொற்றில் அதிமுக அரசு மக்களை பாதுகாத்து இருக்கிறது. அதே போன்று புதிய அரசு உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்,’’ என்றார். 
 
சசிகலா ஆடியோ வெளியானது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு, ‛‛நீங்கள் எப்படி தொலைக்காட்சிகளில் பார்க்கிறீர்களோ அதே போன்று தான் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி கருத்து கேட்க வேண்டுமென்றால் சசிகலாவிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும், ’’ என்றார். மேலும் பருப்பு டெண்டரை தமிழக அரசு ரத்து செய்தது பற்றி கேட்டதற்கு, ‛‛பருப்பு டெண்டரை ரத்து செய்தது அரசின் நடவடிக்கை. அரசின் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட முடியாது,’’ என முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான காமராஜ் தெரிவித்தார்

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு
தஞ்சாவூரில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு "கொலு விற்பனை" கண்காட்சி தொடக்க விழா
தஞ்சையில் தி.மு.க சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்
தஞ்சையில் தி.மு.க சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்
சப்தமங்கை தலங்களில் சிறப்பு பெற்ற பெருமை கொண்ட திருச்சக்கராப்பள்ளி தலம்
சப்தமங்கை தலங்களில் சிறப்பு பெற்ற பெருமை கொண்ட திருச்சக்கராப்பள்ளி தலம்
அரசு ஊழியர்களே... கவனிக்கவும்! உங்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசு ஊழியர்களே... கவனிக்கவும்! உங்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
V S Babu Health : கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
Ration Card Special Camp : ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Embed widget