மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.31 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் - வழங்கிய தஞ்சை கலெக்டர்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவில் ரூ.9.31 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவில் ரூ.9.31 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

ஐ.நா. வழிகாட்டுதல்படி 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவது மற்றும் அவர்களின் நல்வாழ்வு, உரிமைகள், அவர்களுக்கு உரிமை கொடுப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாகவும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சம உரிமையை வழங்குவதற்கு, நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதையும் அது அறிவுறுத்துகிறது.

சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் தினத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள், நீடித்த வளர்ச்சி மற்றும் இலக்குகளை அடைய மாற்றுத்திறனாளர்களுக்கு, அவர்களுடன் இணைந்து அவர்களே செயலாற்றி, அதை அடைய வேண்டும் என்பதாகும். அந்த வகையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வரின் மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கை,கால் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.31 லட்சம் மதிப்பிலான செயற்கை கை,கால் உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:


மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.31 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் - வழங்கிய தஞ்சை கலெக்டர்

தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாதாந்திர உதவித்தொகை மற்றும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
சென்னைக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரில் சிறப்பாக இந்த நலஉதவி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக உடலியல் மருத்துவம் மற்றும் புணர்வு வாழ்வுத்துறை துறைத்தலைவர் மரு.ச.குமரவேல் வரவேற்றார். மரு.து.பாலமுரளி நன்றி கூறினார்.  பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் உலகமாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதுதஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நலஅலுவலர் சீனிவாசன், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ பேராசிரியர்கள் ராமசாமி,  ஆறுமுகம், செல்வம், முகமது இத்ரிஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிநலனுக்காக தமிழகஅரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக சீடு என்ற தொண்டு நிறுவனம் மூலமாக கலைக்குழு மூலம் மாவட்டம் முழுவதும் கலைநிகழ்வுகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் நடக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
Embed widget