மேலும் அறிய

அதிமுகவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

அதிமுகவை சிலர் அழிக்கவும், முடக்கவும் பார்த்த நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன் அத்தனையும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது

தஞ்சாவூர்: அதிமுகவை சிலர் அழிக்கவும், முடக்கவும் பார்த்த நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன் அத்தனையும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று பெருமிதத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற 65 அடி உயர கொடியேற்று விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கொடியேற்றி அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:

அடுத்து வருகிற தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. இந்த இயக்கத்தைச் சிலர் அழிக்கவும், முடக்கவும் பார்த்த நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன் அத்தனையும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இக்கட்சியில் உழைக்கிற சாதாரண தொண்டர்கள் கூட நிச்சயமாக உச்ச நிலையை அடைவர். அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்ட இயக்கம் அதிமுகதான். எனவே மக்களின் துணையுடன் அதிமுக நிச்சயமாக ஆட்சிக்கு வரும்.  எம்ஜிஆர் விட்டுச் சென்ற பணியை ஜெயலலிதா செய்தார். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை ஜெயலலிதா அரசு செய்தது. இடையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகள் 8 மாதங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஆனால், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் 100 சதவீதமும் நிறைவேற்றிவிட்டதாகத் தமிழக முதல்வர் பொய்யைச் சொல்லி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து வருகிறார். 
முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்வதாக முதல்வர் ஸ்டாலின்  கூறுகிறார். தொழில் முதலீட்டை ஈர்க்க வேண்டுமானால், சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்திருக்கலாம். ஆனால் முதலீட்டை ஈர்ப்பதற்காக அல்லாமல் முதலீடு செய்வதற்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். 

விவசாயத்துக்கு தண்ணீர் முக்கியம். ஆனால் திமுக ஆட்சியில் நீர் ஆதாரத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிகழாண்டு 3 லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் கிடைக்காததால், பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நட்டத்துக்கு ஆளாகினர். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அதிமுக ஆட்சியில் ரூ. 20 ஆயிரம் கொடுக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் ரூ. 13 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 17 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், திமுக அரசு ரூ. 13 ஆயிரத்து 500 மட்டுமே கொடுத்தது. 

மத்திய மற்றும் கர்நாடக அரசுகளிடம் போராடி, வாதாடி நமது பங்கு நீரைப் பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாராளமாக தண்ணீர் கிடைத்து நல்ல விளைச்சலை பெற வேண்டிய விவசாயிகளுக்கு அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இன்றைய அரசு விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

விவசாயத்துக்கு அதிமுக ஆட்சியில் 24 மணிநேரமும் கொடுக்கப்பட்ட மும்முனை மின்சாரமும் இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை. எந்த நேரம் மின்சாரம் தடைபடும் என்ற அச்சத்தில்தான் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் நிலையில் உள்ளனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு  அவர் பேசினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
Embed widget