மேலும் அறிய

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை 1500ஆக உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்...!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் மாற்றத்திறனாளிகளுக்கு 1500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.

தஞ்சை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்திட கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தஞ்சை மாநகர செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். தஞ்சை ஒன்றிய செயலாளர் சங்கிலிமுத்து, நிர்வாகிகள் ராதிகா, சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். பாண்டிச்சேரி, தெலுங்கானா போன்ற வெளிமாநிங்களில் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி மாதம் 1500 ரூபாய் வழங்கப்படுவதாக திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்  தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பற்றி கூறாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை 1500ஆக உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்...!

எனவே, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று சட்டமன்றத்தில் வைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதை அமல்படுத்தம் வகையில், 1500 உயர்த்தி வழங்கி வேண்டும்.

இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தஞ்சையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கத்தின் நீண்டகால கோரிக்கையாக, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 3 ஆயிரமும், கடும் உடல்பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரமும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர், தனது மூன்று சக்கர வாகனத்தில் வந்து  கலந்து கொண்டு,  கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. 

இது குறித்து மாவட்ட செயலாளர் இளங்கோவன் கூறுகையில்,

மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 மற்றும் 5000 உதவித்தொகை கேட்டிருந்தோம். ஆனால் நிதிஅமைச்சர் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கின்றது என வெள்ளை அறிக்கையில் வெளியிட்டுள்ளதால், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல், 1500 ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது உள்ள விலைவாசி உயர்வால், மாற்றுத்திறனாளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமத்தில் இருந்து வருகின்றார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் மாற்றத்திறனாளிகளுக்கு 1500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.

எனவே, தமிழக அரசு வரும் கூட்டத்தொடரின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு, 1500 உயர்த்தி வழங்குவதை அறிவிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் தமிழத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து, மாநில நிர்வாகிகளின் ஆலோசனைபடி, மிக மிக வீரியத்துடன் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget