மேலும் அறிய

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை 1500ஆக உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்...!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் மாற்றத்திறனாளிகளுக்கு 1500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.

தஞ்சை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்திட கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தஞ்சை மாநகர செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். தஞ்சை ஒன்றிய செயலாளர் சங்கிலிமுத்து, நிர்வாகிகள் ராதிகா, சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். பாண்டிச்சேரி, தெலுங்கானா போன்ற வெளிமாநிங்களில் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி மாதம் 1500 ரூபாய் வழங்கப்படுவதாக திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்  தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பற்றி கூறாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை 1500ஆக உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்...!

எனவே, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று சட்டமன்றத்தில் வைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதை அமல்படுத்தம் வகையில், 1500 உயர்த்தி வழங்கி வேண்டும்.

இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தஞ்சையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கத்தின் நீண்டகால கோரிக்கையாக, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 3 ஆயிரமும், கடும் உடல்பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரமும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர், தனது மூன்று சக்கர வாகனத்தில் வந்து  கலந்து கொண்டு,  கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. 

இது குறித்து மாவட்ட செயலாளர் இளங்கோவன் கூறுகையில்,

மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 மற்றும் 5000 உதவித்தொகை கேட்டிருந்தோம். ஆனால் நிதிஅமைச்சர் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கின்றது என வெள்ளை அறிக்கையில் வெளியிட்டுள்ளதால், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல், 1500 ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது உள்ள விலைவாசி உயர்வால், மாற்றுத்திறனாளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமத்தில் இருந்து வருகின்றார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் மாற்றத்திறனாளிகளுக்கு 1500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.

எனவே, தமிழக அரசு வரும் கூட்டத்தொடரின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு, 1500 உயர்த்தி வழங்குவதை அறிவிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் தமிழத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து, மாநில நிர்வாகிகளின் ஆலோசனைபடி, மிக மிக வீரியத்துடன் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget