மேலும் அறிய

Kallanai Canal Rehabilitated: 87 ஆண்டுகளுக்கு பின் கல்லணை கால்வாய் சீரமைப்பு

ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மேல்பகுதியில் காட்டாறும், அதன் கீழே பாசன ஆறும் செல்லும் வகையில் வியக்க வைக்கும் கட்டுமானத்தை தற்போது பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் கல்லணைக் கால்வாயில் உள்ள கீழ்குமிழி சீரமைக்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மேல்பகுதியில் காட்டாறும், அதன் கீழே பாசன ஆறும் செல்லும் வகையில் வியக்க வைக்கும் கட்டுமானத்தை தற்போது பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் கல்லணைக் கால்வாயில் உள்ள கீழ்குமிழி சீரமைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணை கட்டப்பட்ட அதே கால கட்டமான 1928-ம் ஆண்டு முதல் 1934-ம் ஆண்டு வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கல்லணைக் கால்வாய் என்றழைக்கப்படும் புதாறு வெட்டப்பட்டது. இந்த பாசன ஆறு வெட்டப்படும்போது, மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் செல்ல வடிகால்களும் முறையாக செப்பணிடப்பட்டது.

Kallanai Canal Rehabilitated: 87 ஆண்டுகளுக்கு பின் கல்லணை கால்வாய் சீரமைப்பு
காட்டாறும், பாசன ஆறும் கலக்காத வகையில் கல்லணைக் கால்வாயின் குறுக்கே 100- க்கும் மேற்பட்ட இடங்களில் "சைப்பன்கள்" அமைக்கப்பட்டது. இதில் பாசன ஆறு மேல்பகுதியிலும், காட்டாறு வாய்க்கால்கள் அதன் அடிபகுதியிலும் செல்லும். அதே போல் காட்டாறு மேல்பகுதியிலும், பாசன ஆறு அதன் கீழ் பகுதியிலும் செல்லும் வகையில் அடப்பன்பள்ளம், கண்டிதம்பட்டு, ஈச்சன்விடுதி உள்ளிட்ட நான்கு இடங்களில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் "கீழ்குமிழி" என அழைத்து அதனை ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் பிரதானமானது தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டில் உள்ள கீழ்குமிழி. இங்கு மேல்பகுதியில் வல்லம்வாரி எனப்படும் காட்டாறு செல்கிறது. வல்லம் பகுதியில் பெய்யும் மழைநீர் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து இதன் வழியாக 29 கி.மீட்டர் தூரம் பயணித்து வடுவூர் அருகே கண்ணனாற்றில் சேருகிறது. கல்லணைக் கால்வாய் ஆற்றில் கீழ்குமிழி என்றழைக்கப்படும் இடத்தில் 8 கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கன அடிநீர் வந்தாலும் அப்படியே உள்வாங்கி சுமார் 100 அடி தூரத்துக்கு உள்பகுதியில் பாய்ந்து பின்னர் வெளியேறும் வகையில் இந்த கட்டுமானம் செங்கல் - சுண்ணாம்பு கலவைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த வியக்க வைக்கும் கட்டுமானத்தை  பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தற்போதும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
 
பழமை மாறாமல்; இந்நிலையில் கல்லணைக் கால்வாய் ஆறு தனது முழு கொள்ளளவான 4,700 கன அடிநீர் செல்ல வேண்டும் என்பதற்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் 148 கீலோ மீட்டர் தூரமுள்ள இந்த ஆறு ரூ.2639.15 கோடியில் 16 தொகுப்புகளாக முழுமையாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக கண்டிதம்பட்டு கீழ்குமிழியும் சீரமைக்கப்பட்டு, அதன் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இந்த கட்டுமானம் அப்படியே பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ளது. 

Kallanai Canal Rehabilitated: 87 ஆண்டுகளுக்கு பின் கல்லணை கால்வாய் சீரமைப்பு
இதுகுறித்து கல்லணைக் கால்வாய் உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் கூறியதாவது: கல்லணைக் கால்வாய் என்பதே ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பொறியாளர் எல்லீஸ் என்பவரால் கொண்டு வரப்பட்ட அற்புதமாக பாசன திட்டமாகும். இதில் கண்டிதம்பட்டு கீழ்குமிழியில் வல்லம் வாரி மேல்பகுதியில் எவ்வித இடையூறும் இல்லாமல் மழைக்காலத்தில் தண்ணீர் ஓடும். பாசனநீர் கல்லணைக் கால்வாயில் ஓடும். துவரை அந்த இடத்தில் ஒரு கசிவு கூட வந்ததில்லை. தற்போது கல்லணைக் கால்வாய் முழுவதுமாக சீரமைக்கப்படுவதால், இந்த கீழ்குமிழியும் வலுப்படுத்தப்படுகிறது, என்றார்.

Kallanai Canal Rehabilitated: 87 ஆண்டுகளுக்கு பின் கல்லணை கால்வாய் சீரமைப்பு
87 ஆண்டுகள் கழித்து, தற்போது தான் கீழ்குமிழி சீரமைக்கப்படுகிறது. 80 சதவீத பணிகள் கீழ்குமிழியில் நிறைவு பெற்றுள்ளது. இதற்காக கல்லணைக் கால்வாய் ஆற்றில் கீழ்குமிழியில் சிக்கிய குப்பை கழிவுகள் மட்டும் 20 டன் அளவுக்கு அகற்றி, அந்த இடத்தினை  முழுமையாக சீரமைத்துள்ளோம் .தொடர்ந்து அடுத்தாண்டுகளில் மீதியுள்ள கீழ்குமிழிகளும் பழமைமாறாமல் அப்படியே வலுப்படுத்தப்பட உள்ளது என்றார். நவீன தொழில் நுட்பத்தில் பழமை மாறாமல் கல்லணை கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs KKR LIVE Score: விக்கெட் விழுந்தாலும் மிரட்டும் கிங் கோலி; ஆக்ரோசமாக பந்து வீச கொல்கத்தா தீவிரம்!
RCB vs KKR LIVE Score: விக்கெட் விழுந்தாலும் மிரட்டும் கிங் கோலி; ஆக்ரோசமாக பந்து வீச கொல்கத்தா தீவிரம்!
CM Stalin:
"சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai | வேட்புமனு தாக்கல் விவகாரம்’’அ.மலையின் ப்ளான் இதுதான்’’ செல்வப்பெருந்தகை விளாசல்Durai Vaiko Trichy DMK | ”வேலை பார்க்க மாட்டோம்” துரை வைகோவுக்கு போர்க்கொடி! திருச்சி திமுக பூகம்பம்Kanimozhi Pressmeet | ’’கனவு காண்பது அவர் உரிமை’’அ.மலையை கலாய்த்த கனிமொழி..60% வாக்குகள்Sowmiya anbumani speech | ”நான் உங்க வீட்டு பொண்ணு” பிரச்சாரத்தில் கலக்கும் சௌமியா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs KKR LIVE Score: விக்கெட் விழுந்தாலும் மிரட்டும் கிங் கோலி; ஆக்ரோசமாக பந்து வீச கொல்கத்தா தீவிரம்!
RCB vs KKR LIVE Score: விக்கெட் விழுந்தாலும் மிரட்டும் கிங் கோலி; ஆக்ரோசமாக பந்து வீச கொல்கத்தா தீவிரம்!
CM Stalin:
"சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Embed widget