மேலும் அறிய

நோயாளியை தாக்கியதாக மாறி மாறி புகார்....பரபரப்பான மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நோயாளியை தாக்கியதாக  காவலர் மீதும், காவலரை தாக்கியதாக நோயாளி உறவினர்கள் மீதும் மாறிமாறி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளியாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுக்கா பகுதிகளுக்கு பிரதான மருத்துவமனையாக விளங்கி வரும் இந்த அரசு பெரியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், சலவைதொழிலாளர்கள், பாதுகாவலர்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். 


நோயாளியை தாக்கியதாக மாறி மாறி புகார்....பரபரப்பான மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

இந்நிலையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரின்  மனைவி தேவயானிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக கணவர் சூர்யா மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாவலராக இருந்த டேவிட்  உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா அவரது தம்பி ரகு ஆகியோர் பாதுகாவலர் டேவிட்டை கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன்  அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் சூர்யா, ரகு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். 


நோயாளியை தாக்கியதாக மாறி மாறி புகார்....பரபரப்பான மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

தொடர்ந்து சிகிச்சையில் உள்ள தேவயானியை தனியார் நிறுவன பாதுகாவலர்கள் திட்டி அடித்ததாக  குற்றம்சாட்டி உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு பாதுகாவலர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பாதுகாவலர் டேவிட்டை தாக்கிய சூர்யா, ரகு ஆகியோரை கைது செய்யப்படாததை கண்டித்தும், பணிபாதுகாப்பு வழங்க கோரியும் மருத்துவமனை முன்பு பணிகளை புறக்கணித்து ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இருவரையும் கைது செய்வதாக அளித்த வாக்குறுதியின்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை, 1.5 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம்! 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனையை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆர்.லலிதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மயிலாடுதுறை கோ- ஆப்டெக்ஸில் இந்த ஆண்டு சிறப்பு வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம் ஆரணி திருபுவனம் பட்டு புடவைகள் கோவை கோரா காட்டன் சாரிகள், கூறைநாடு புடவைகள் பல்வேறு ஊர்களில் நெசவாளர்கள் நெய்த பருத்தி சேலைகள், இந்த ஆண்டு புதுவரவாக லினன் சேலைகள், மேலும் போர்வைகள் படுக்க கைவிரிப்புகள் தலையணை உறைகள் வேட்டிகள் லுங்கி துண்டு ரகங்கள் பருத்தி சட்டைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வரவைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோ -ஆப்டெக்ஸ் கடலூர்  மண்டலத்திற்கு 14 கோடி ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ஒரு கோடி ரூபாயும் சீர்காழி விற்பனை நிலையத்திற்கு 50 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 


நோயாளியை தாக்கியதாக மாறி மாறி புகார்....பரபரப்பான மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் தவணை திட்டத்தில் 11, 12 வது மாத தவணைகளை  கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் செலுத்தும் மேலும் தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீதம்  வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு கடன் விற்பனை வசதியும் உண்டு என்றும் அனைத்து துறை ஊழியர்களும் கைத்தறிக்கு கை கொடுத்து உதவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா, கோ-ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் தா.ரமணி, மயிலாடுதுறை விற்பனை நிலைய மேலாளர் S.குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Embed widget