மேலும் அறிய

உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்றத் தீர்ப்பை தஞ்சை கிளை மேலாளர் முறையாக நடைமுறைப்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

தஞ்சாவூர்: அரசு விரைவு போக்குவரத்துக் கழக தஞ்சை பணிமனையில், உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை பணிமனை சிஐடியு தலைவர் டி.பரத்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் பணிச்சுமை, பணி நியமனம் மற்றும் அலுவலக மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை அலுவலக மாற்றுப் பணிகளில் பயன்படுத்தக் கூடாது என்றும், அவர்கள் எந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்களோ அந்தப் பணியை மட்டுமே மேற்கொள்ளும் வகையில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் ஓட்டுநர் ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு உரிய பணியாளர்களை முறையாக நியமிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதன்மூலம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது வழக்கமான பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

தொழிலாளர்களுக்கு பணிகளை முறையாகப் பகிர்ந்தளிக்கும் வகையில் சுழல் முறை பணி முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பணி நியமனம் மற்றும் பணிப்பகிர்வில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக தொழிலாளர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய சங்க துணைத் தலைவர் பி.வெங்கடேசன், நாகை மண்டல துணைத் தலைவர் க.அய்யப்பன், கும்பகோணம் மண்டல துணைப் பொதுச்செயலாளர் முருகானந்தம், துணைத் தலைவர் ராமசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, சா.செங்குட்டுவன், மாவட்ட துணைத் தலைவர் த.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை தஞ்சை கிளை மேலாளர் முறையாக நடைமுறைப்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, போக்குவரத்துக் கழக நிர்வாகம் தொழிலாளர்களின் பணிநிலை தொடர்பான பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பணிமனைச் செயலாளர் ஏ.எஸ்.பழனிவேல் நன்றி கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget