மேலும் அறிய

தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர முடியுமா? - திருமடம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் வேதனை

தங்களது குழந்தைகள் ஆங்கில வழியில் படித்தால்தான் வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் என்ற தவறான மயக்க நிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டது.

சோழர் காலத்தில் தாய்மொழிக் கல்வி இருந்ததால், கடல் கடந்து பல்வேறு நாடுகளில் தமிழர்களின் பெருமை பறைசாற்றப்பட்டது. அத்தகைய தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர முடியுமா? என்ற நிலைமையில் நாம் இருக்கிறோம் என்று பேரூர் திருமடம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தஞ்சை மாவட்ட தமிழ்க் கல்வி இயக்கம் சார்பில் தமிழ்வழிக் கல்வி மூன்றாவது மாநாடு நடந்தது.

இதில் பங்கேற்று அவர் பேசியதாவது: சோழர் காலத்தில் தாய்மொழிக் கல்வி இருந்தததால், கடல் கடந்து பல்வேறு நாடுகளில் தமிழர்களின் பெருமை பறைசாற்றப்பட்டது. அத்தகைய தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர முடியுமா? என்ற நிலைமையில் நாம் இருக்கிறோம்.

நிறைய பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக ஆங்கில வழிக் கல்வியில் பெருகிவிட்டது. அக்காலத்தில் எட்டாம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கட்டாயக் கல்வி இருந்தது. ஆங்கிலம் கூடுதலாக ஒரு மொழிப் பாடமாகத்தான் இருந்து வந்தது. இதில், கற்றுத் தேர்ந்தவர்கள்தான் அப்துல் கலாம் போன்ற அறிவியலாளர்கள், சான்றோர்கள் உருவாகினர்.

1970 ஆம் ஆண்டுக்கு பின்பு ஆங்கிலக் கல்விக்கு அனுமதி கிடைக்கத் தொடங்கியது. தங்களது குழந்தைகள் ஆங்கில வழியில் படித்தால்தான் வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் என்ற தவறான மயக்க நிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டது. இதன் விளைவாக படித்த கூலிகள், தொழில்நுட்பக் கூலிகள் என சொல்லக்கூடிய அளவுக்கு பெருகியுள்ளது.

எனவே, தமிழ் வழிக் கல்வியை மீண்டும் எப்படிக் கொண்டு வர வேண்டும் என நாம் சிந்திக்க வேண்டும். இதற்காக பொறியியல், மருத்துவக் கல்வியை அந்தந்த மாநிலங்களில் தாய்மொழியில் கொண்டு வர அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்திலும் நிறைய நூல்களை மொழியாக்கம் செய்வது, புதிய நூல்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தொடங்குவதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறைய முயற்சி செய்தார். இப்போதைய அரசும் தொடர்ந்து செயல்படுகிறது.

அரசு தொடர்ந்து செய்தாலும், அந்த எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழ்வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மாணவர்கள் முன்வராததே இதற்குக் காரணம். அறிவியல், கணிதம், மருத்துவம், பொறியியல் போன்றவற்றை ஆங்கில வழியைத் தவிர தாய்மொழியில் படிக்க முடியாது என்ற தவறான எண்ணம் பரவி வருகிறது.

ஜெர்மனி, ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் பொறியியல், மருத்துவத்தைத் தங்களது தாய்மொழியில்தான் கற்கின்றனர். கர்நாடகம் போன்ற பக்கத்து மாநிலங்களில் தாய்மொழிக் கல்வியில் உறுதியாக இருப்பது போன்று நாமும் தமிழ்வழிக் கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழைப் பயிற்று மொழியாக மாற்ற வேண்டிய கடமையைச் செய்வதில் நாம் உறுதியாக இருந்தால்தான் தமிழ்வழிக் கல்வி கனவு நனவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர முடியுமா?  - திருமடம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் வேதனை

முன்னதாக, மருத்துவர் சு. நரேந்திரன் எழுதிய தமிழ் வழிக் கல்வி கனவா? நனவா? என்ற நூலை அடிகளார் வெளியிட, அதை மருத்துவர் இரா. இளங்கோவன் பெற்றுக் கொண்டார். செம்மொழித் தமிழாய்வு நிறுவன சிறப்பு நிலைப் பேராசிரியர் மருதநாயகம், திருச்சி அமுதன் அடிகள், தமிழியக்கப் பொதுச் செயலர் திருமாறன், இணைச் செயலர் இளமுருகன், ஈரோடு புதுமலர் இதழாசிரியர் கண. குறிஞ்சி, தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் பதிப்பாசிரியர் காமராசன், திருவையாறு ஔவைக் கோட்டம் கலைவேந்தன், பேராசிரியர் பெரியசாமி, உலகத் திருக்குறள் பேரவை புலவர் கந்தசாமி மற்றும் பலர் பேசினர். தாமரை இதழாசிரியர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். முனைவர் வி. பாரி வரவேற்றார். பேராசிரியர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
Embed widget