மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் 27,990 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது

மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர், அரசு பஸ்,வாகன ஒட்டிகள், கார்களில் முககவசம் இல்லாமல் வந்தவர்களை மறித்து, கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, அனைவரையும் முககவசம் அணிய வைத்தார்

தஞ்சை மாநகராட்சி, கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா  ஊக்குவிப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நேரில் பார்வையிட்டு ஆய்வு பின் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற  கொரோனா தடுப்பூசி முகாம்கள்,  மற்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம்  15 வயதிற்கு மேற்பட்ட 20,38,500  பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு, 17,60,782  பயனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசியும்,   10,71,205   பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் 27,990 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது

கடந்த 3.ஆம்  தேதி முதல் 15 முதல் 18 வயதுவரையிலான 1,11,400 பள்ளி,  கல்லூரி செல்லும் மற்றும் செல்லாத சிறார்களுக்கு    தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இதுவரை  87431   சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 10ஆம் தேதி அன்று முதல் சுகாதாரபணியாளர்கள், முன்களபணியாளர்கள் , 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு ஊக்குவிப்பு தவணை செலுத்தப்படுகிறது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அனைத்து ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளில் இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்கள் மூலம்  சுமார்  27,990 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இதுவரை 318 பயனாளிகளுக்கு தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிற்கும் 4 பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை, இந்திய மருத்துவ கழகம், செஞ்சிலுவை சங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், இம்முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு மாவட்ட அளவிலான கூட்டங்களையும், வட்டார அளவிலான கூட்டங்களையும் நடத்தி அனைத்து துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள். தன்னார்வ  தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் 27,990 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது

இம்முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயனாளிகள் அனைவரும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை தகுந்த கால இடைவெளியில் தவறாது செலுத்திக்கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள 4474 படுக்கைகளில் 1031 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலக அளவில் ஒமிக்ரான் கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்பு உள்ளதால் பொது மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்,   பொது மக்கள் அனைவரும் கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றார்.


தஞ்சை மாவட்டத்தில் 27,990 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர், தஞ்சை மணிமண்டபம் அருகில் காரை விட்டு இறங்கி, அரசு பஸ்,வாகன ஒட்டிகள், கார்களில் முககவசம் இல்லாமல் வந்தவர்களை மறித்து, கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, அவர்கள் அனைவரையும் முககவசம் அணிய வைத்து, அனுப்பி வைத்தார்..அவருடன் நகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், தஞ்சாவூர்  வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget