மேலும் அறிய

தென்னக கலை பண்பாட்டு மையத்தில் நடந்த தஞ்சாவூர் உற்சவம் கலைவிழா

இந்திராகாந்தி தேசிய கலை மையம் சார்பில், தஞ்சாவூர் உற்சவம் எனும் கலைவிழா என்ற, இயல், இசை, நாடக முப்பெரும் விழா தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்திராகாந்தி தேசிய கலை மையம் சார்பில், தஞ்சாவூர் உற்சவம் எனும் கலைவிழா  என்ற, இயல், இசை, நாடக முப்பெரும் விழா தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்திராகாந்தி தேசிய கலை மையம், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் இந்திய தொல்லியல் துறை இனைந்து 75-வது ஆண்டு இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் தஞ்சாவூர் உற்சவம் என்ற இயல், இசை, நாடக முப்பெரும் கலை விழா  கடந்த 11 ந்தேதி முதல் தொடங்கி  பிப்.13ம் தேதி வரை  மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு கடந்த 11 ந்தேதி    காலை 9 மணியளவில் இந்திராகாந்தி தேசிய கலை மைய அறங்காவலர் முனைவர் பத்மாசுப்ரமணியம் முன்னிலையில், தஞ்சாவூர் அரண்மனை மூத்த இளவரசர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே  தொடங்கி வைத்தார்.


தென்னக கலை பண்பாட்டு மையத்தில் நடந்த தஞ்சாவூர் உற்சவம் கலைவிழா

உத்திராபதி குழுவினரின் மங்கள இசை, வேத பாராயணம் மற்றும் சுவாமிநாத ஓதுவார் குழுவினரின் தேவார இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. காலையில் கருத்தரங்கமும் மாலை 6 மணிக்கு, தென்னக பண்பாட்டு மைய திறந்தவெளி அரங்கில், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 12 ந் தேதி தஞ்சாவூர் ஓவியம் குறித்த பயிற்சி பட்டறைகள், கிராமிய நடனம், தப்பாட்டம், வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


தென்னக கலை பண்பாட்டு மையத்தில் நடந்த தஞ்சாவூர் உற்சவம் கலைவிழா

13- ந் தேதி நடனம் மற்றும் நாடகம், பயிற்சி பட்டறைகள் தென்னக பண்பாட்டு மையத்தில்  காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.  சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 6.30 மணிக்கு முனைவர் நர்த்தகி நடராஜ் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும்,  மைசூர் மஞ்சுநாத் குழுவினரின் வயலின் இசை நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலத்திலிருந்து 60 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் உற்சவத்தில் நடைபெறும் 3 நாள் பயிற்சி பட்டறையில் இயல், இசை மற்றும் நாடகம் (நடனம்) ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொண்டனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் உற்சவம் கலை விழாவினை மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.


தென்னக கலை பண்பாட்டு மையத்தில் நடந்த தஞ்சாவூர் உற்சவம் கலைவிழா

இந்நிகழ்ச்சியில், இந்திராகாந்தி தேசிய கலை மைய  வதோதரா மண்டல இயக்குநர் அருப்பா லகிரி, இந்திராகாந்தி தேசிய கலை மைய புதுச்சேரி மண்டல இயக்குநர் முனைவர் கோபால், இந்தியல் தொல்லியல் துறை திருச்சி சரக இயக்குநர் முனைவர் அருண்ராஜ், தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் பொறுப்பு ராஜகோபாலன், சரஸ்வதி மகால் நூலக முன்னாள் காப்பாளர் பெருமாள் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய நண்பர்கள் குழு செயலாளர்  முத்துக்குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget