மேலும் அறிய

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை கலெக்டர் ஆய்வு

கடந்த சில நாட்களுக்கு முன்பு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில், மனுவில் குறிப்பிட்டுள்ள கிராம பகுதிகளில், மணல் பரப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் காவிரி ஆறு, விளாங்குடி மற்றும் வாழ்க்கை கிராம கொள்ளிடம் ஆற்றில், மணல் குவாரி அமைக்க கூடாது என விவசாயிகள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி, கலெக்டர் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமத்தில், காவிரி ஆற்றிலும், திருவையாறு அருகே விளாங்குடி, வாழ்க்கை கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்ட மணல் குவாரிக்கு எதிராக, கடந்த 2018ம் ஆண்டு பவனமங்கலத்தை சேர்ந்த பாலகணேஷ், பொன்னுராமன்,  விளாங்குடியை சேர்ந்த  சச்சிதானந்தம் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில், மனுவில் குறிப்பிட்டுள்ள கிராம பகுதிகளில், மணல் பரப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பவனமங்கலத்தில் காவிரி ஆற்றிலும், விளாங்குடி,வாழ்க்கை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலும் ஆய்வு செய்தார்.


சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை கலெக்டர் ஆய்வு

ஆய்வின்போது, கலெக்டரிடம் பொன்னுராமன்,பாலகணேஷ், வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் அளித்த மனுவில்; எங்கள் பகுதி கிராமங்களுக்கு உயிர்நாடியாக விளங்குவது காவிரியே ஆகும். எங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு காவிரியே ஆதாரம் ஆகும்.  

எங்களது கிராமம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள காவிரி அணையிலிருந்து ஒரு கி.மீ க்குள் அமைந்துள்ளது. இதனால் ஆற்றில் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் ஆற்று மணலை அடித்துச்சென்றுவிடும். இதன் காரணமாக ஆறு பள்ளமாகவும், எங்களது ஊர் மேடாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக எங்கள் ஊருக்கு திருக்காட்டுப்பள்ளி அணைக்கு மேற்கில், புதுச்சத்திரம் கிராமத்தில் பாசனவாய்க்கால் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் தண்ணீர் ஏறி பாய்வதே இல்லை.

மேலும், புதுச்சத்திரம் மற்றும் விஷ்ணம்பேட்டை கிராமங்களை கடந்து எங்கள் ஊருக்கு பாசன நீர் வருவதே இல்லை. இதன் காரணமாக எங்கள் ஊர் முழுவதும் மோட்டார்கள் மூலம் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீருக்கு ஆதாரமாக இருப்பது ஆற்றில் படிந்துள்ள மணலே ஆகும். இந்த மணலை அப்புறப்படுத்திவிட்டால் எங்கள் ஊரின் மோட்டார்கள் வறண்டுவிடும். எங்கள் ஊரின் குடிநீர் மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்.


சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை கலெக்டர் ஆய்வு

கடந்த முறை பவனமங்கலம் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க முற்பட்டபோது 01/05/2018 அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மணல்குவாரி அமைப்பதை தவிர்க்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதன் முடிவுகள் அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் கிராம மக்களின் நலனுக்கும் கிராம சபையின் முடிவுகளுக்கும் எதிராக குவாரி அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

விளாங்குடி சச்சிதானந்தம் அளித்த மனுவில்; எங்கள் பகுதியில் மணலை எடுத்தால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயமும் பாதிக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கொள்ளிடம் ஆற்றில் சுமார் 22 ஆழ்துளை கிணறுகள் அமைத்து 8 மாவட்டங்களுக்கு மேல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக எடுத்து செல்லப்படுகிறது. மேலும், மணல் குவாரி அமைத்தால் கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார்.

ஆய்வின் போது, ஆர்.டி.ஓ.,(பொ) பழனிவேல்,தாசில்தார்கள் பழனியப்பன்,பெர்சியா, காவிரி வடிகால் கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, கனிம வள செயற் பொறியாளர் அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget