![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மயிலாடுதுறை: ஆடி அமாவாசை பூம்புகார் காவிரி சங்கமத்தில் தர்ப்பணம் செய்ய தடை!
பூம்புகார் கடற்கரையில் ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
![மயிலாடுதுறை: ஆடி அமாவாசை பூம்புகார் காவிரி சங்கமத்தில் தர்ப்பணம் செய்ய தடை! aadi new moon banned from performing at poompuhar cauvery sangam மயிலாடுதுறை: ஆடி அமாவாசை பூம்புகார் காவிரி சங்கமத்தில் தர்ப்பணம் செய்ய தடை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/06/d1b731f1dbc8881e027233f3313cc1e4_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்யது பித்ரு ப்ரீதி செய்தால் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி அமாவாசையை முன்னிட்டு புண்ணிய தலங்களிலும், நீர்நிலைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோவில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கு படை எடுப்பதும் வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை முன்னேற்பாடு காரணமாக வருகின்ற 9 ஆம் தேதி வரை கடற்கரை, காவிரிக்கரை மற்றும் கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவேரின் எண்ணிக்கை சற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் கொரோனா 3 வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா பரவலை பொறுத்து கட்டுபாடுகளை விதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆடி அம்மாவாசை முன்னிட்டு ஆண்டுதோறும் மயிலாடுதுறை மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி, பூம்புகாரில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னேர்களுக்களுக்கு தர்பணம் கொடுப்பது வாடிக்கை. ஆடி அம்மாவாசை முன்னிட்டு காவிரி ஆறு மற்றும் கடற்கரைகளில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது திரண்டால் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் கடற்கரை மற்றும் காவிரி ஆறுகளில் பொது மக்கள் கூட வருகின்ற 9 ஆம் தேதி வரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)