மேலும் அறிய

தஞ்சாவூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் - இலக்கு ஒரு லட்சம் ஆனால் போடப்பட்டதோ 85 ஆயிரம்

’’5ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் 85,328 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக 66 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 48 பேர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர்.  இது வரை 938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்றது. இம்முகாமிற்காக 1.34 லட்சம் டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள்  வரவழைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை  57 சவீதம் பேர்  முதல் தவணை தடுப்பூசியும், 17 சதவீதம் பேர்  இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு 56.5 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 66 சதவீதம் பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தஞ்சாவூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் - இலக்கு ஒரு லட்சம் ஆனால் போடப்பட்டதோ 85 ஆயிரம்

தடுப்பூசி முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தில்  கிராமப்புற பகுதிகளில் 721 இடங்களிலும், நகர்ப்புற பகுதிகளில் 119 இடங்களிலும் என மொத்தம் 840 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 3,360 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிராமப்புறங்களில் பொது மக்கள் அதிக அளவில் வராததால், 85,328 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார துறையினர் காலை முதல் மதியம் வரை இலக்கினை எட்டி விடுவார்கள். ஆனால் மாலை வரை இலக்கினை எட்டாததால், முகாமில் உள்ள சுகாரத்துறையினர், அப்பகுதியிலுள்ளவர்களிடம் கெஞ்சியபடி, தடுப்பூசி செலுத்த வேண்டி கேட்டனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு இன்னமும் போதுமான விழிப்புணர்வு ஏற்படாததால், பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வரவில்லை. இதனால் மாலை 7 மணி வரை முகாமிலேயே, பொது மக்கள் யாராவது தடுப்பூசி செலுத்தி கொள்ள வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், கும்பகோணத்தில் நடைபெற்ற முகாமில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன், கொரோனா வைரஸ் போன்று உருவத்தில், கும்பகோணத்திலுள்ள மக்கள் கூடும் இடங்கள், வணிக நிறுவனங்கள் , பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களிடம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என நுாதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் 4513 பேரும், பூதலுார் வட்டாரத்தில் 4767 பேரும், கும்பகோணம் வட்டாரத்தில் 14672  பேரும், மதுக்கூர் வட்டாரத்தில் 3251 பேரும, ஒரத்தநாடு வட்டாரத்தில்  4838 பேரும், பாபநாசம் வட்டாரத்தில் 4077 பேரும், பட்டுக்கோட்டைவட்டாரத்தில் 8969 பேரும், பேராவூரணி வட்டாரத்தில் 5417 பேரும், சேதுபாவசத்திரம் வட்டாரத்தில் 5417 பேரும், தஞ்சாவூர் வட்டாரத்தில் 15945 பேரும், திருப்பனந்தாள் வட்டாரத்தில் 4200 பேரும், திருவையாறு வட்டாரத்தில் 3720 பேரும், திருவிடைமருதுார் வட்டாரத்தில் 5685 பேரும், திருவோணம் வட்டாரத்தில் 2602 பேரும் என மொத்தம் 84328 பேர் தடுப்பூசி செலத்தி கொண்டுள்ளனர். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Embed widget