மேலும் அறிய

’தஞ்சையில் தேசிய மக்கள் நீதிமன்றம்’ - 3257 வழக்குகளில் 8 கோடி இழப்பீடு மற்றும் தீர்வு தொகை...!

’’தஞ்சாவூர், கும்பகோணம், திருவிடைமருதுாரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 3257 வழக்குகளில் 80,892,280 இழப்பீடு மற்றும் தீர்வு தொகை பெறப்பட்டுள்ளது’’

தேசிய சட்டப் பணிகள் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் ஆணைப்படி மற்றும் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சுதா அறிவுரைகளின் படி, கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழ்மை நீதிமன்ற்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காணும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்ற அமர்வுகளில், குடும்ப நல நீதிமன்றம் கூடுதல் மாவட்ட நீதிபதி பி.இந்திராணி, முதன்மை சார்பு நீதிபதி ஜிஎன். சரவணகுமார், வழக்கறிஞர் மகாசண்முகம் ஆகியோர் கலந்து கொண்ட முதலாவது அமர்வில் சிவில் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு 41.88 லட்சம் தீர்வு காணப்பட்டது.

இரண்டாவது அமர்வில் இன்றியமைபண்டங்கள் சட்ட வழக்குகள் சிறப்ப நீதிமன்றம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி எஸ்.சண்முகவேல், மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு சார்பு நீதிபதி எஸ். அண்ணாமலை, வழக்கறிஞர் ஹெலன்ரோஸ் ஆகியோர் கொண்ட அமர்வில் சிவில் வழக்குகளுக்கு 5.17 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.


’தஞ்சையில் தேசிய மக்கள் நீதிமன்றம்’ - 3257 வழக்குகளில் 8 கோடி இழப்பீடு மற்றும் தீர்வு தொகை...!

மூன்றாவது அமர்வில் இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி எ.மலர்விழி, முதண்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அனிதா கிருஷ்ணன், வழக்கறிஞர் தம்பிதுரை ஆகியோர் கொண்ட அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்கு 3.70 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. அனைத்து அமர்வுகளுக்கும் மொத்தம் 2679 வழக்குகளக்கு தீர்வு காணப்பட்டு, 6.57.27.203 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக பெற்று தரப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பி.சுதா மற்றும் நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர். கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அதில்  முதல் அமர்வில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.பிரகாஷ் தலைமையில், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி எஸ். மும்தாஜ், கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றின் நீதிபதி பி.தரணிதர் மற்றும் இரண்டாவது அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்  டி.சண்முகப்பிரியா அவர்கள் தலைமையில், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வி.வெங்கடேசப்பெருமாள், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் கே.மோகன்ராஜ் ஆகியோரது கலந்து கொண்டனர்.


’தஞ்சையில் தேசிய மக்கள் நீதிமன்றம்’ - 3257 வழக்குகளில் 8 கோடி இழப்பீடு மற்றும் தீர்வு தொகை...!

அதேபோல் திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கே.நிலவரசன் தலைமையில் கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் இரண்டின் நீதிபதி ஆர்.பாண்டி மகாராஜா, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் பி.லட்சுமி பங்கேற்பில் மொத்தம் 911-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு  578-வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. அதில் மூன்று காசோலை மோசடி வழக்கில் மூலம் 4,21,924,   42 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் 1,26,59,693 ரூபாயும் 7 கடன் வசூல் வழக்கின் மூலம் 17,02,260 ரூபாயும் 3 ஜீவனாம்ச வழக்குகள் மூலம் 20,000 ரூபாயும்,   ஒரு தொழிலாளர் வழக்குகள் மூலம் 20,000 ரூபாயும் 121-குற்றவியல் வழக்குகள் மூலம் 1,17,600 ரூபாயும் 401 சிறு குற்ற வழக்குகள் மூலம் 2,23,600 ரூபாயும்  என மொத்தம் 1,51,65,077 ரூபாய் இழப்பீடு மற்றும் தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.