மேலும் அறிய

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டில் 30 ஆயிரம் பறிமுதல்

அலுவலகத்திற்கு தொடர்பில்லாமல் நின்றிருந்த  இரண்டு புரோக்கர்களிடமும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள  அரசு அலுவலக  மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், புரோக்கர்கள், வாகன தொடர்பாக வருபவர்களிடம், அன்பளிப்பு வாங்கி வருவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தஞ்சாவூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார், மதியம் 2 மணிக்கு திடிரென அதிரடி  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் உள்ளே மூன்று இடங்களில் சோதனையிட்ட போது, அலுவலகத்தின் வெளியில் துாக்கி வீசப்பட்டு கீழே கிடந்த 30 ஆயிரத்தை கைப்பற்றினர். அப்போது, அலுவலகத்திற்கு தொடர்பில்லாமல் நின்றிருந்த  இரண்டு புரோக்கர்களிடமும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டில் 30 ஆயிரம் பறிமுதல்

அத்துடன் அலுவலக ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில்,  டிராவல்ஸ், டிரைவிங் பள்ளி போன்ற பல்வேறு உரிமையாளர்கள் அதிகாரிகளுக்குப் பணம் கொடுப்பதாக கிடைத்த பேரில், அதிரடியாகச் சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாக  இருப்பதால், அலுவலகத்தின் எதிரிலுள்ள சேவை மையத்தில் தனது, வாடிக்கையை தொடர்கின்றனர்.


தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டில் 30 ஆயிரம் பறிமுதல்

லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காரணத்திற்காக வரும் பொதுமக்களிடம், அலுவலகத்திலுள்ள ஒருவர், நீங்கள் கேட்கும், விண்ணப்பம் இல்லை. எதிரிலுள்ள குறிப்பிட்ட கடையில், எனது பெயரை சொல்லி சென்று வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அங்கு சென்றால், நீங்கள் கேட்கும் விண்ணப்பம் இங்கு இல்லை, தேவை என்றால், சில நாட்கள் ஆகும் என்று கோபத்துடன் பேசுகின்றனர். பின்னர் விண்ணப்பம் வாங்க சென்றவர், அலுவலகத்தில் உள்ளவரின் பெயரை கூறியவுடன், விண்ணப்பத்திற்கு 1500 தாருங்கள். எந்தவிதமான தயக்கமில்லாமல் கேட்கின்றார்கள்.

குறைந்த விலையிலுள்ள விண்ணப்பத்தை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றீர்களே என்று கேட்டால், நாங்கள், வட்டார போக்குவரத்து அலுவலர். ஆய்வாளர், எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் கொடுத்தது போக மீதமுள்ள சொற்ப பணத்தை தான் கிடைக்கும். இப்படி எல்லாம் நாங்கள் வாங்கி கொடுக்காவிட்டால், நாங்கள் இங்கு பொழப்பு நடத்த முடியாது என்று மரியாதை குறைவாக பேசி, பணத்தை பெற்று கொள்ளுகின்றனர்.  

அதன் பிறகு பணத்தை குறைவாக கொடுத்தால், 20 நாட்களும், கேட்கும் தொகை கொடத்தால், உடனே, அவர்கள் கேட்பது நடைபெற்று வருகிறது. இது போன்ற நடைபெறுவது அனைத்து பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும், புரோக்கர்களுக்கும் தெரிந்து நடைபெறுவது என்பது வேதனையான விஷயமாகும். லஞ்ச ஒழிப்பு போலீசார், பாதிக்கப்பட்டவர்கள், தகவல் அளித்ததின் பேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இது போன்ற ஆய்வு மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கண்துடைப்பிற்காக நடத்தப்படும் சோதனையாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Embed widget