மேலும் அறிய

11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - காரணமான இளைஞர் போக்சோவில் கைது

வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும், காதலனும் திருமணம் செய்ய மறுத்து விட்டார், பெற்றோர்களும் திட்டுகிறார்கள் என்று மனமுடைந்த மாணவி வீட்டிலிருந்து பூச்சிக்கொல்லி  விஷ மருந்து குடித்தார்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது காதலியான +1 படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில், திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். தங்களது மகள் திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்ததை அறிந்து பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த அச்சிறுமி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்கா,  வளப்பக்குடியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (27). டாடா மினி வேன் சொந்தமாக  டிரைவராக உள்ளார். சாமிநாதன், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான 16 வயது சிறுமி, அடிக்கடி அவர்களது வீட்டிற்கு சென்று வரும் நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளார்.

திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +1 படித்துவரும் மாணவியை, அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என உறுதி மொழி அளித்தார். சாமிநாதன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறியதை நம்பி, மாணவி, சாமிநாதனுடன் நெருங்கி  பழகியுள்ளார். காதல் விஷயம் பெற்றோர்களுக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும், அதனால் இருவரும் சந்திப்பை தவிர்த்து கொள்ளலாம் என மாணவி கூறியுள்ளார். மேலும்  நான் படித்து கொண்டிருக்கின்றேன், படித்த முடித்த பிறகு காதலை பற்றி பேசிக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு சாமிநாதன், மாணவியிடம், உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சாமிநாதனின் வாக்குறுதியை நம்பிய மாணவியும், சாமிநாதனும் அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.  அதன் விளைவாக மாணவி, 3 மாத கர்ப்பிணி ஆனார்.


11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - காரணமான இளைஞர் போக்சோவில் கைது

இதுபற்றி அறிந்த சாமிநாதன், 18 வயது பூர்த்தி அடையாததால் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது, 18 வயது பூர்த்தியடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற காரணம் காட்டி அச்சிறுமியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.அம்மாணவி, தான் கர்ப்பம் தரித்துள்ள தகவலை தனது பெற்றோரிடம் கூறாமல் இத்தனை நாட்களும் மறைத்து வந்துள்ளார்.  இந்நிலையில், தங்களது மகளின் உடலில் மாறுபாடு ஏற்பட்டதையறிந்த அறிந்த மாணவியின் பெற்றோர்கள், விசாரித்த போது, தனது திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்து மாணவியின் பெற்றோர்கள் அதிரிச்சியடைந்து திட்டியுள்ளனர். வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும், காதலனும் திருமணம் செய்ய மறுத்து விட்டார், பெற்றோர்களும் திட்டுகிறார்கள் என்று மனமுடைந்த மாணவி வீட்டிலிருந்து பூச்சிக்கொல்லி  விஷ மருந்து குடித்தார்.


11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - காரணமான இளைஞர் போக்சோவில் கைது

அம்மாணவி தான்  தற்கொலை செய்து கொள்ள விஷமருந்திய  தகவலை பெற்றோர்களிடம் கூறியதற்கு பிறகு, அருகிலுள்ளவர்கள், அம்மாணவியை உடனடியாக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையிலுள்ள கர்ப்பிணியான மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுபற்றிய புகாரின்பேரில், திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அச்சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான சாமிநாதனை கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
Embed widget